தாய்லாந்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த ஓட்டலின் கழிவறை கோப்பையில் விஷம் கொண்ட உடும்பு வெளிவந்த சம்பவம் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இங்கிலாந்திலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் தாய்லாந்து நாட்டின் பத்தும் தானி என்னும் இடத்தை சுற்றி பார்க்க சென்றிருக்கிறார்கள். அங்கு புதிதாக கட்டப்பட்டு இருந்த ஒரு ஓட்டலில் அவர்கள் தங்கினார்.
அப்போது, சிலர் கழிப்பறைக்கு சென்றுள்ளனர். அங்கு கோப்பையில் விஷத்தன்மை கொண்ட ஒரு உடும்பு வெளிப்பட்டதை பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அந்த உடும்பு மீண்டும் கோப்பைக்குள் சென்று கழிவுநீர் குழாய் வழியே வெளிவந்திருக்கிறது.