spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்பிரதமரைக் காண வேண்டும்: 1ரூ இட்லி பாட்டியின் அன்பு வேண்டுகோள்!

பிரதமரைக் காண வேண்டும்: 1ரூ இட்லி பாட்டியின் அன்பு வேண்டுகோள்!

- Advertisement -
idly patti

கமலாத்தாள் பாட்டி அவருக்கு வயது 85. பல்வேறு காரணங்களைக் கட்டி உணவுப் பொருள்களின் விலையை ஏற்றிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்த கமலாத்தாள் பாட்டி 1 ரூபாய்க்கு இட்லி விற்று, தமிழக மக்களின் மனதில் தனி இடம் பிடித்தார்.

காலம் முழுவதும் ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன் என்று சொன்ன கமலாத்தாள் பாட்டி

வெளியிடங்களில் உள்ள ஹோட்டல்களில் ஒரு இட்லி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில் எளிய மக்கள் பசியாற வேண்டும் என்ற நோக்கில் கமலாத்தாள் பாட்டி ஒரு ரூபாய்க்கு இட்லியும், மணக்கும் சாம்பார், சட்னி ஆகியவற்றை தனது கையால் சமைத்து விற்பனை செய்து வருகிறார்.

அதிகாலை 4 மணிக்கு எழும் கமலாத்தாள் பாட்டி தனது கூன்விழுந்த கழுத்துடன் தள்ளாத வயதிலும் வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு இட்லி, சாம்பார், சட்னி வைக்கும் பணியையும் தொடங்குகிறார். நாள் ஒன்றுக்கு கமலாத்தாள் பாட்டி குறைந்தபட்சம் 600 இட்லிகள் வரை விற்பனை செய்து தனது காலத்தை ஓட்டி வருகிறார்.

kamalathamal

இட்லிக்கு மாவு அரைக்க மட்டுமே கிரைண்டர் பயன்படுத்தும் கமலாத்தாள் பாட்டி, சட்னி அரைப்பதற்கு இன்னும் கல் உரலையே பயன்படுத்தி வருகிறார். கமலாத்தாள் பாட்டியின் கைப்பக்குவத்தில் சமைக்கப்படும் சாம்பார், சட்னிக்காகவே காலை முதலே ஏராளமானோர் வந்துவிடுகின்றனர்.

மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள், அரசு அலுவலகத்தில் பணி செய்வோர், தனியார் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் என பலரும் கமலாத்தாள் பாட்டியின் கைப்பக்குவத்தில் செய்யப்படும் இட்லி, சட்னி, சாம்பாருக்காக காலை முதலே காத்திருக்கிறார்கள்.

25 பைசாவுக்கு இட்லி விற்பனை செய்யத் தொடங்கிய கமலாத்தாள் பாட்டி விலைவாசி உயர்வு காரணமாக இன்று ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டியின் சேவையைப் பார்த்து, ஆனந்த் மகேந்திரரா, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாரத் கேஸ் மற்றும் ஹெச்.பி.கேஸ் நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் இட்லி அம்மா கமலாத்தாள் தனக்கு மாதம் தோறும் இரண்டு இலவச சிலிண்டர்களை வழங்கி வரும் பாரதப்பிரதமர் மோடியை சந்திக்க ஆவலோடு இருப்பதாக தெரிவித்தார்.

மோடி இருக்கும் இடத்திற்கே சென்று சந்திக்க அனுமதி வேண்டுமெனவும், இல்லையெனில் தன்னுடைய இடத்திற்கு பிரதமர் வந்து இட்லி சாப்பிட்டு செல்லவேண்டும் என பாரத பிரதமருக்கு இட்லி அம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe