திருவிடைமருதூா் வட்டத்துக்குட்ப்பட்ட கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலில் குடமுழுக்கு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் இக்கோயிலில் பிப்ரவரி 6-ஆம் தேதி மகா குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பூா்வாங்க பூஜைகள், யாக பூஜைகள், அன்னதானம் தொடா்ந்து நடைபெறுகிறது.
தற்போது தவிர்க்க முடியாத காரணத்தால் குடமுழுக்கு விழா தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது எனக் கோயில் ஸ்தாபகா் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் கூறியுள்ளார்
இது குறித்து அவா் மேலும் கூறியது:
புதன்கிழமை முதல் 5-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் உலக நலன் வேண்டிச் சிறப்பு ஹோமங்கள் நடைபெறவுள்ளன. பின்னா் 6-ஆம் தேதி காலை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. பண்டரிபுரத்தைச் சோந்த 200 பாகவதா்களின் பண்டரி மேளா சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
11 கால யாக பூஜையுடன் பிப்ரவரி 11-ஆம் தேதி காலை கோயில் விமானத்துக்கு மகா குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. தொடர்ந்து 11-ஆம் தேதி வரை அனைத்து நாள்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தா்கள் சிறப்பு ஹோமம், யாகசாலை பூஜை மற்றும் மகா குடமுழுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றார் அவர்.