சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி.. கூண்டில் சிக்கிய நபர்! வைரல்!

lion - 2026

ஒரு நபர் உயிரியல் பூங்காவில் கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கத்தை சீண்டும் வேலையில் ஈடுபட்டார்.

இந்த நபர் சற்றும் யோசிக்காமல் நேரடியாக கூண்டில் கையை நுழைப்பதை வீடியோவில் காணலாம். அந்த நபர் சிங்கத்தைத் சீண்டும் நோக்கில், அதனை தொட முயன்றார். ஆனால் முயற்சி தோல்வியடைந்ததோடு, சிங்கம் அவரது வலது கையை கவ்விப் பிடித்தது.

சிங்கம் தாக்கிய சம்பவம் செனகலில் உள்ள பார்க் ஹென் உயிரியல் பூங்கா என கூறப்படுகிறது. சிங்கத்தின் கர்ஜனையின் சத்தத்தில் காட்டின் கொடூரமான விலங்குகள் கூட நடுங்குகின்றன என்ற போது மனிதன் எம்மாத்திரம்.

சிங்கம் மனிதனை தாக்குவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

சமூக ஊடகத்தில் (Social Media) வெளியான சமீபத்திய இந்த வீடியோவில், கூண்டில் அடைபட்ட சிங்கம் ஒரு மனிதனின் கையை தனது வாயில் கெட்டியாக கவ்விக் கொண்டிருப்பதைக் நீங்கள் காணலாம். மனிதனின் அலறல் சத்தத்தையும் கேட்கலாம்.

சிங்கத்தை சீண்ட நினைத்த நபர் தனது கைகளை மீட்க முடிந்தவரை முயற்சி செய்கிறார். அதேநேரம் அருகில் இருந்த சிலர் கற்களை வீசி சிங்கத்தின் கவனத்தை திசை திருப்ப முயற்சித்த போதும் சிங்கம் நகரவில்லை.

இருப்பினும், சில நொடிகளில் சிங்கம் மனிதனின் கையை விடுவித்தது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்த வீடியோவை பார்த்த பிறகு யாரும் இப்படி ஒரு தவறை செய்ய நினைக்க மாட்டார்கள்.

இந்த வீடியோ யூடியூப்பில் எவ்ரிதிங் இன் ரியல் லைஃப் டிவி என்ற சேனலில் பகிரப்பட்டது. இதுவரை இந்த வீடியோ 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வீடியோவை பார்த்து சிலர் அதிர்ச்சியடைந்த நிலையில், பலர் நகைச்சுவையாகவும் பதில் அளித்துள்ளனர்.

இங்கு பாடம் கற்ற பிறகு, இந்த நபர் தனது வாழ்நாள் முழுவதும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவார் என்று ஒரு பயனர் நகைச்சுவையாக எழுதினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories