December 6, 2025, 8:13 AM
23.8 C
Chennai

கண்ணான நட்பால் கண்டு களித்த விளையாட்டு..! நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!

friend - 2025

துன்பம் வரும் காலத்திலும் நம்முடனே இருப்பவர் தான் உண்மையான நண்பர்.
நட்புக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் வீடியோ, தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கிரிக்கெட், புட்பால், ஹாக்கி போன்ற விளையாட்டுப் போட்டிகள் என்றாலே நம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். டிவி, செல்போன் போன்றவற்றில் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்போது மிகுந்த ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் போட்டியை நாம் கண்டு ரசிப்போம்.

அதிலும், போட்டி நடைபெறும் மைதானத்துக்கு நாம் நேரில் சென்று விட்டால், ஆரவாரக் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது.

ஆனால், ஃபுட்பால் போட்டி நடைபெறும் மைதானம் ஒன்றுக்கு நேரில் செல்ல வாய்ப்பு கிடைத்த போதிலும், அந்தப் போட்டியை முழுமையாக ரசிக்க முடியாத துரதிஷ்டம் உடையவராக இருந்தார் கர்லோஸ்.

இவருக்கு பார்வை தெரியாது என்பதே இதற்கு காரணமாகும். ஆனால் உண்மையான நண்பன் சீசர் கூடவே இருந்த காரணத்தால் அந்தக் கவலையும் தீர்ந்து போனது.

ஃபுட்பால் போட்டி லைவாக ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில், மைதானம் போன்ற அட்டை ஒன்றை டேபிளில் வைத்து, அதில் கர்லோசின் கரங்களை பற்றியவாறு, பந்து எந்த திசையை நோக்கி உதைக்கப்படுகிறது, எந்த அணி முன்னேறிச் செல்கிறது என்பது குறித்து விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார் சீசர்.

போட்டி நடைபெறுகின்ற அதே வேகத்தில் ஒவ்வொரு நகர்வு குறித்தும் தனது நண்பர் சீசரின் உதவியால் தெரிந்து கொண்டே வந்தார் கர்லோஸ்.

ஒரு சமயத்தில், தங்களுக்கு ஆதரவான அணி கோல் போட்டது குறித்து தெரிந்த உடன் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார் கர்லோஸ். சீசரின் முயற்சியால் கர்லோஸின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.

இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.

இந்த வீடியோவை 5.37 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். குறிப்பாக ஏராளமான நெட்டிசன்கள் ஹார்டின்களை பறக்க விட்டனர்.

இந்த வீடியோவை காண்பவர் ஒவ்வொருவர் கண்களிலும் நீர் வழிந்து ஓடுகிறது. சீசரின் இந்த அற்புதமான முயற்சிக்கு நெட்டிசன்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து இன்ஸ்டாகிராம் பதிவாளர் ஒருவர் வெளியிட்ட பதிவில், “நான் இதை மிகவும் விரும்புகிறேன் நமக்கும் கூட சீசரை போன்ற நண்பர்கள் நிறைய தேவைப்படுகின்றனர்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு பதிவர், “அடடா என்ன ஆச்சர்யம், என்ன ஒரு உண்மையான நண்பர்” என்று கூறியுள்ளார். இவ்வுலகையும், இங்குள்ள நிகழ்வுகளையும் ரசிக்க கண்கள் கூட தேவைப்படாது போல. உண்மையான நண்பன் இருந்தாலே போதுமானது என்பதை உணர்த்துகிறது இந்த நிகழ்வு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories