கண்ணான நட்பால் கண்டு களித்த விளையாட்டு..! நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!

friend - 2026

துன்பம் வரும் காலத்திலும் நம்முடனே இருப்பவர் தான் உண்மையான நண்பர்.
நட்புக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் வீடியோ, தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கிரிக்கெட், புட்பால், ஹாக்கி போன்ற விளையாட்டுப் போட்டிகள் என்றாலே நம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். டிவி, செல்போன் போன்றவற்றில் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்போது மிகுந்த ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் போட்டியை நாம் கண்டு ரசிப்போம்.

அதிலும், போட்டி நடைபெறும் மைதானத்துக்கு நாம் நேரில் சென்று விட்டால், ஆரவாரக் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது.

ஆனால், ஃபுட்பால் போட்டி நடைபெறும் மைதானம் ஒன்றுக்கு நேரில் செல்ல வாய்ப்பு கிடைத்த போதிலும், அந்தப் போட்டியை முழுமையாக ரசிக்க முடியாத துரதிஷ்டம் உடையவராக இருந்தார் கர்லோஸ்.

இவருக்கு பார்வை தெரியாது என்பதே இதற்கு காரணமாகும். ஆனால் உண்மையான நண்பன் சீசர் கூடவே இருந்த காரணத்தால் அந்தக் கவலையும் தீர்ந்து போனது.

ஃபுட்பால் போட்டி லைவாக ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில், மைதானம் போன்ற அட்டை ஒன்றை டேபிளில் வைத்து, அதில் கர்லோசின் கரங்களை பற்றியவாறு, பந்து எந்த திசையை நோக்கி உதைக்கப்படுகிறது, எந்த அணி முன்னேறிச் செல்கிறது என்பது குறித்து விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார் சீசர்.

போட்டி நடைபெறுகின்ற அதே வேகத்தில் ஒவ்வொரு நகர்வு குறித்தும் தனது நண்பர் சீசரின் உதவியால் தெரிந்து கொண்டே வந்தார் கர்லோஸ்.

ஒரு சமயத்தில், தங்களுக்கு ஆதரவான அணி கோல் போட்டது குறித்து தெரிந்த உடன் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார் கர்லோஸ். சீசரின் முயற்சியால் கர்லோஸின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.

இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.

இந்த வீடியோவை 5.37 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். குறிப்பாக ஏராளமான நெட்டிசன்கள் ஹார்டின்களை பறக்க விட்டனர்.

இந்த வீடியோவை காண்பவர் ஒவ்வொருவர் கண்களிலும் நீர் வழிந்து ஓடுகிறது. சீசரின் இந்த அற்புதமான முயற்சிக்கு நெட்டிசன்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து இன்ஸ்டாகிராம் பதிவாளர் ஒருவர் வெளியிட்ட பதிவில், “நான் இதை மிகவும் விரும்புகிறேன் நமக்கும் கூட சீசரை போன்ற நண்பர்கள் நிறைய தேவைப்படுகின்றனர்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு பதிவர், “அடடா என்ன ஆச்சர்யம், என்ன ஒரு உண்மையான நண்பர்” என்று கூறியுள்ளார். இவ்வுலகையும், இங்குள்ள நிகழ்வுகளையும் ரசிக்க கண்கள் கூட தேவைப்படாது போல. உண்மையான நண்பன் இருந்தாலே போதுமானது என்பதை உணர்த்துகிறது இந்த நிகழ்வு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories