ஒருவரின் தனிப்பட்ட எல்லைக்குள் வேறு அவதார் நுழைய முடியாது: மெட்டா!

meta - 2026

Meta தனது மெய்நிகர் அவதாரங்கள் தொடர்பான அம்சத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

இந்த அம்சம் உங்கள் அவதாரத்திற்கும் மற்றவர்களுக்கும் இடையில் சுமார் நான்கு அடி தூரம் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். இது தேவையற்ற தொடர்புகளைத் தவிர்க்க உதவும்.

மெய்நிகர் அவதாரங்கள் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக மக்களிடமிருந்து Metaverseக்கு தொடர்ந்து புகார்கள் வந்துக் கொண்டிருப்பதை அடுத்து நிறுவனம் இந்த மாற்றத்தை செய்திருக்கிறது.

நினா ஜேன் படேல் என்பவர் மெய்நிகர் உலகில் (virtual World) நுழைந்த உடனேயே ஃபேஸ்புக்கின் மெட்டாவேர்ஸில் “கிட்டத்தட்ட கூட்டு பாலின வன்புணர்வு செய்யப்பட்டதாக” என்று ஓரிரு நாட்களுக்கு முன்னதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்ணயிக்கப்பட்ட வரம்பை அடைந்துவிட்டதால் வேறொருவரின் தனிப்பட்ட எல்லைக்குள் நுழைய முயற்சித்தால், அவதாரத்தின் முன்னோக்கி இயக்கத்தை அமைப்பு இயல்பாகவே நிறுத்தும் வகையில் இந்த அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

விர்ச்சுவல் ரியாலிட்டி உலகத்தை பாலியல் துன்புறுத்தல் இல்லாததாக மாற்ற, சமூக வலைப்பின்னல் Meta, Horizon Worlds மற்றும் Horizon Venues விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) அமைப்புகளுக்கான ‘தனிப்பட்ட எல்லை’ (personal boundary) அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.

அது குறித்து பேசிய ஹொரைசன் துணைத் தலைவர் விவேக் ஷர்மா “இது மக்களின் அனுபவங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாங்கள் அறிந்துகொள்வதன் மூலம் தொடர்ந்து இந்த அம்சத்தை மேம்படுத்துவோம்” என்றார்.

நிர்ணயிக்கப்பட்ட வரம்பை அடைந்துவிட்டதால் வேறொருவரின் தனிப்பட்ட எல்லைக்குள் நுழைய முயற்சித்தால், அவதாரத்தின் முன்னோக்கி இயக்கத்தை அமைப்பு இயல்பாகவே நிறுத்தும்.

வெள்ளிக்கிழமை பிற்பகுதியில், ஷர்மா இது குறித்து பதிவிட்டார்.

அதில், “நீங்கள் அதை உணர மாட்டீர்கள் — ஹாப்டிக் பின்னூட்டம் இல்லை. இது ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. ஒரு அவதாரத்தின் கைகள் அத்துமீறி நுழைந்தால் உடனே அவை மறைந்துவிடும். ஒருவரின் தனிப்பட்ட எல்லைக்குள் வேறு அவதார் நுழைய முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

VR போன்ற ஒப்பீட்டளவில் புதிய ஊடகத்திற்கு, முக்கியமான நடத்தை விதிமுறைகளை அமைப்பதிலும் மெட்டாவர்ஸ் நிறுவத்தின் இந்த முடிவு உதவக்கூடும்.

“எதிர்காலத்தில், புதிய கட்டுப்பாடுகள் மற்றும் UI மாற்றங்களைச் சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்வோம், மக்கள் தங்கள் தனிப்பட்ட எல்லையின் அளவைத் தனிப்பயனாக்க அனுமதிப்பது போன்றது” என்று ஷர்மா தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories