ஓசூரில் இந்தியாவின் முதல் மெட்டாவர்ஸ் திருமணம்!

Metaverse4 - 2026

இந்த டிஜிட்டல் உலகத்தில் பல்வேறு புதிய டெக்னலாஜி கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது, அதில் ஒன்றுதான் மெட்டாவர்ஸ். மெட்டாவர்ஸ் (Metaverse) என்பது ஒரு மெய்நிகர், அதாவது விசுவல் ரியாலிட்டி (Virtual Reality) என்பதாகும்.

டிஜிட்டல் உலகத்தில் வாழவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும். தற்போது இந்த மெட்டாவர்ஸ் மூலம் திருமணங்களும் நடைபெற தொடங்கியுள்ளது.

உலகிலேயே முதன்முதலாக மெட்டாவெர்ஸ் முறையில் திருமண விழா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த‌ ட்ரேசி மற்றும் டேவ் காக்னன் இருவரும் மெய்நிகர் திருமணம் செய்த முதல் ஜோடிகள் ஆவார்கள்.

Metaverse3 - 2026

மெட்டாவெர்ஸ் முறைக்காக இவர்களைப் போலவே உள்ள உருவங்கள் மற்றும் பிடித்த உடையணிந்து, பிடித்த இடம் எல்லாமே மெட்டவர்சில் வடிவமைக்கப்படும்.

இந்த திருமணத்தை அமெரிக்காவின் விர்பெலா நிறுவனம் வடிவமைத்து நடத்தியது.

இந்த நிலையில், இந்தியாவிலும் முதன்முறையாக மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் ஓசூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Screenshot 2022 0208 095637 - 2026

சென்னை ஐஐடியில் பணியாற்றி வரும் தினேஷிற்கும், நந்தினி என்பவருக்கும் ஓசூர் அருகேயுள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில் திருமண நடைபெற்றது.

சிவலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி பாஞ்சலி தம்பதியினரின் மகள் ஜனக நந்தினி, இவரும் கம்ப்யூட்டர் இஞ்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் பிப்ரவரி 6 ஆம் தேதி காலை சிவலிங்கபுரம் கிராமத்தில் ஜனக நந்தினியின் இல்லத்தில் நடைபெற்றது.

காலையில் திருமணம் முடிந்த பின்னர் மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மெட்டாவெர்ஸ் எனப்படும் மெய்நிகர் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவிலேயே முதன்முறையாக நடைபெற்றது.

Metaverse2 - 2026

திருமணத்தை தொடர்ந்து, வரவேற்பு நிகழ்ச்சியில் மெட்டாவெர்ஸ் எனப்படும் மெய்நிகர் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வரவேற்பு நிகழ்சியை நடத்தியுள்ளனர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் மறைந்த பெண்ணின் தந்தை, திருமண வரவேற்பிற்கு வருபவர்களை வரவேற்கும் வகையில் வடிவமைக்கட்டிருந்தது.

மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
இதில் புதுமண தம்பதியரின் நண்பர்கள் உறவினர்கள் என ஏராளமானோர் அவதார் ஆடைகளை அணிந்தபடி பங்கேற்றுள்ளனர்.

Metaverse1 - 2026

மெட்டாவெர்ஸ் முறையில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் “தந்தையின் உருவமும் தத்ரூபமாக இருந்தது” என தம்பதினர் தெரிவித்தனர்.

இணையதள வசதி இல்லாத சிவலிங்கபுரம் கிராமத்தில் மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடியாது என்பதால் அருகிலுள்ள ஜேசுராஜபுரம் கிராமத்தில் இதனை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.

பிளாக்செயின் என்பது மெட்டாவெர்ஸின் அடிப்படை தொழில்நுட்பம். கிரிப்டோ காயினை மைனிங் செய்து வரும் தினேஷ், மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தை வைத்து தன்னுடைய திருமணத்தை நடத்த திட்டமிட்டார்.

Metaverse - 2026

இதை தன்னுடைய வருங்கால மனைவியிடம் சொல்ல, அவரும் இதற்கு சம்மதித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட 91 நிறுவனங்கள் அடங்கிய தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கின் பெயரை ‘மெட்டா’ என்று மாற்றினார் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்.

இதன் பின்னணியில் இருப்பது ‘மெட்டாவெர்ஸ்’ எனும் புதிய டிஜிட்டல் உலகம்தான் என்பதும் குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories