கிடுகிடு என்று மலையேறும் பாட்டி! வைரல்!

nagarathnama - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ ஒரு 62 வயது மூதாட்டியினுடையது. இவர் தோட்டாவின் வேகத்தில் மலை ஏறுவதை வீடியோவில் காண முடிகின்றது.

பாட்டிக்கு பின்னால் நிற்கும் இளைஞர்கள் அவர் வேகமாக மலை ஏறுவதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பாட்டியின் வேகமும் துடிதுடிப்பும் அனைவரையும் வியக்க வைக்கிறது.

தினசரி பணிகளை செய்வதற்கே இளைஞர்களுக்கு சோம்பேறித்தனம் வரும் இந்நாட்களில் இந்த பாட்டியின் வேகமும் சுறுசுறுப்பும் மக்களை ஆச்சரியப்படுத்துகின்றது.

ஆச்சரியமளிக்கும் இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஏராளமான நெட்டிசன்கள் இதை லைக் செய்துள்ளனர்.

சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவில், மலை உச்சியில் ஒரு ஆணும், கீழே பாட்டியும் நிற்பதைக் காண முடிகிறது. பார்த்துக்கொண்டிருக்கும் போதே, பாட்டி, கயிற்றின் உதவியுடன் கிடுகிடுவென மலை ஏறுகிறார்.

பாட்டி மலை ஏறுவதைப் பார்த்தால், அவருக்கு இவ்வளவு வயதானதே தெரியவில்லை. இளைஞர்களுக்கான சுறுசுறுப்புடன் அவர் மலை ஏறுகிறார்.

இந்த வீடியோ பிப்ரவரி 16-ம் அன்று எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பெங்களூருவை சேர்ந்த அந்த பாட்டி தனது மகன் மற்றும் அவர்களது நண்பர்களுடன் கேரளாவில் உள்ள சஹ்யாத்ரி மலைத்தொடரின் உச்சியில் ஏறுவதற்காக வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது என தெரியவந்துள்ளது.

வெற்றிகரமாக ஏறிய பிறகு, கடந்த நாற்பது ஆண்டுகளாக தான் குடும்பப் பொறுப்பில் பிஸியாக இருந்ததாக பாட்டி கூறினார். தற்போது தனது மகன்கள் வளர்ந்து செட்டில் ஆகி விட்டதால், இனி தனது கனவுகளை நிறைவேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாட்டி ஏறி முடித்த மலை 1868 மீட்டர் உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் இருந்து, இது படு சூப்பராக இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

நெட்டிசன்களும் பாட்டியை பாராட்டி பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் Timeofkarnataka என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories