சென்னை: சென்னையில் காவல் உதவி ஆணையர் ஒருவர், சக பெண் போலீஸ் ஒருவரிடம் ஆபாசமாகப் பேசும் ஆடியோ வாய்ஸ், வாட்ஸ்அப்பில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து, சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் அதிகாரிகள் மட்டத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த வாய்ஸ் தொடர்பாக, காவல் துறை உயர் அதிகாரிகள், அந்த உதவி ஆணையருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பவுள்ளனராம். இதனிடையே இந்த ஆபாசப் பேச்சு குறித்து சம்பந்தப் பட்ட உதவி ஆணையர், இது பணி தொடர்பான ஏமாற்றத்தில் கூறப்பட்டுள்ள பழிவாங்கல் வேலை என்று கூறியுள்ளார். ஆனாலும், ஆபாசமாகப் பேசிய உதவி ஆணையர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று பரவலாக கேள்வி எழுந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, இந்த விவகாரத்தில், தொடர்புடைய பெண் போலீஸ், அந்த உதவி ஆணையர் மீது புகார் கொடுக்கும் பட்சத்தில், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆபாசமாகப் பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதே நேரம் அந்த பெண் போலீஸ், புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் வேறு மாதிரியான சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். எப்படி இருந்தாலும், பிரச்னைகளுக்கு நாம் போய் நிற்கக் கூடிய போலீஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு நடந்து கொண்டது தற்போது ஊடகங்களில் பெரும் சர்ச்சைக்குரியதாகப் பேசப்படுகிறது.
பெண் போலீஸிடம் உதவி ஆணையர் ஆபாசப் பேச்சு: வாட்ஸ்அப்-பில் பரவும் “கொஞ்சல் வாய்ஸ்”
Popular Categories


