பெண் போலீஸிடம் உதவி ஆணையர் ஆபாசப் பேச்சு: வாட்ஸ்அப்-பில் பரவும் “கொஞ்சல் வாய்ஸ்”

chennai-police-asst-commissionerசென்னை: சென்னையில் காவல் உதவி ஆணையர் ஒருவர், சக பெண் போலீஸ் ஒருவரிடம் ஆபாசமாகப் பேசும் ஆடியோ வாய்ஸ், வாட்ஸ்அப்பில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து, சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் அதிகாரிகள் மட்டத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த வாய்ஸ் தொடர்பாக, காவல் துறை உயர் அதிகாரிகள், அந்த உதவி ஆணையருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பவுள்ளனராம். இதனிடையே இந்த ஆபாசப் பேச்சு குறித்து சம்பந்தப் பட்ட உதவி ஆணையர், இது பணி தொடர்பான ஏமாற்றத்தில் கூறப்பட்டுள்ள பழிவாங்கல் வேலை என்று கூறியுள்ளார். ஆனாலும், ஆபாசமாகப் பேசிய உதவி ஆணையர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று பரவலாக கேள்வி எழுந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, இந்த விவகாரத்தில், தொடர்புடைய பெண் போலீஸ், அந்த உதவி ஆணையர் மீது புகார் கொடுக்கும் பட்சத்தில், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆபாசமாகப் பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதே நேரம் அந்த பெண் போலீஸ், புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் வேறு மாதிரியான சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். எப்படி இருந்தாலும், பிரச்னைகளுக்கு நாம் போய் நிற்கக் கூடிய போலீஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு நடந்து கொண்டது தற்போது ஊடகங்களில் பெரும் சர்ச்சைக்குரியதாகப் பேசப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories