பெண் போலீஸிடம் உதவி ஆணையர் ஆபாசப் பேச்சு: வாட்ஸ்அப்-பில் பரவும் “கொஞ்சல் வாய்ஸ்”

chennai-police-asst-commissionerசென்னை: சென்னையில் காவல் உதவி ஆணையர் ஒருவர், சக பெண் போலீஸ் ஒருவரிடம் ஆபாசமாகப் பேசும் ஆடியோ வாய்ஸ், வாட்ஸ்அப்பில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து, சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் அதிகாரிகள் மட்டத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த வாய்ஸ் தொடர்பாக, காவல் துறை உயர் அதிகாரிகள், அந்த உதவி ஆணையருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பவுள்ளனராம். இதனிடையே இந்த ஆபாசப் பேச்சு குறித்து சம்பந்தப் பட்ட உதவி ஆணையர், இது பணி தொடர்பான ஏமாற்றத்தில் கூறப்பட்டுள்ள பழிவாங்கல் வேலை என்று கூறியுள்ளார். ஆனாலும், ஆபாசமாகப் பேசிய உதவி ஆணையர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று பரவலாக கேள்வி எழுந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, இந்த விவகாரத்தில், தொடர்புடைய பெண் போலீஸ், அந்த உதவி ஆணையர் மீது புகார் கொடுக்கும் பட்சத்தில், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆபாசமாகப் பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதே நேரம் அந்த பெண் போலீஸ், புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் வேறு மாதிரியான சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். எப்படி இருந்தாலும், பிரச்னைகளுக்கு நாம் போய் நிற்கக் கூடிய போலீஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு நடந்து கொண்டது தற்போது ஊடகங்களில் பெரும் சர்ச்சைக்குரியதாகப் பேசப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories