தேசிய விடுமுறை தினங்களைக் குறைக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்

suresh-joshiநாகபுரி: கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, விடுமுறைகள் தினப் பட்டியலில் இருந்து, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதியை நீக்க முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில், காந்தி ஜெயந்தி விடுமுறை தினப் பிரச்னையில் தாங்கள் கருத்து கூற விரும்பவில்லை என்றும், ஆனால், நாட்டில் தேசிய விடுமுறைகள் குறைக்கப் பட வேண்டும் என்று தாங்கள் எண்ணுவதாகவும், அது நாட்டில் பணிக் கலாசாரத்தை மேம்படுத்தும் என்றும் அது தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலர் சுரேஷ் ஜோஷி இதுகுறித்து ஞாயிற்றுக் கிழமை இன்று தெரிவிக்கையில், கோவா விவகாரம் என்ன காரணம் என்று தெரியவில்லை. இது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்துக் கேட்போம். ஆனால், ஒரு ஆய்வு முடிவின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் மக்கள் 150-155 நாட்கள்தான் பணி செய்கிறார்கள், வருடத்தில் விடுமுறைகள் அதிகம் இருப்பதால். இந்த விடுமுறை தினங்கள் குறைக்கப்பட்டால், பணிக் கலாசாரம் சிறப்படையும் என்று கூறினார். முன்னதாக கோவா அரசின் விடுமுறைகள் தினப் பட்டியலில் மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்.2 விடுபட்டுப் போயிருந்தது. இது குறித்து ஆளும் பாஜகவினரே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இது அச்சிட்டதில் நேர்ந்த தவறு என்றும், அது சரிசெய்யப்படும் என்றும் தெளிவுபடுத்தியிருந்தது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories