நாகபுரி: கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, விடுமுறைகள் தினப் பட்டியலில் இருந்து, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதியை நீக்க முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில், காந்தி ஜெயந்தி விடுமுறை தினப் பிரச்னையில் தாங்கள் கருத்து கூற விரும்பவில்லை என்றும், ஆனால், நாட்டில் தேசிய விடுமுறைகள் குறைக்கப் பட வேண்டும் என்று தாங்கள் எண்ணுவதாகவும், அது நாட்டில் பணிக் கலாசாரத்தை மேம்படுத்தும் என்றும் அது தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலர் சுரேஷ் ஜோஷி இதுகுறித்து ஞாயிற்றுக் கிழமை இன்று தெரிவிக்கையில், கோவா விவகாரம் என்ன காரணம் என்று தெரியவில்லை. இது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்துக் கேட்போம். ஆனால், ஒரு ஆய்வு முடிவின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் மக்கள் 150-155 நாட்கள்தான் பணி செய்கிறார்கள், வருடத்தில் விடுமுறைகள் அதிகம் இருப்பதால். இந்த விடுமுறை தினங்கள் குறைக்கப்பட்டால், பணிக் கலாசாரம் சிறப்படையும் என்று கூறினார். முன்னதாக கோவா அரசின் விடுமுறைகள் தினப் பட்டியலில் மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்.2 விடுபட்டுப் போயிருந்தது. இது குறித்து ஆளும் பாஜகவினரே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இது அச்சிட்டதில் நேர்ந்த தவறு என்றும், அது சரிசெய்யப்படும் என்றும் தெளிவுபடுத்தியிருந்தது.
தேசிய விடுமுறை தினங்களைக் குறைக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்
Popular Categories


