ரயில் பயணம்.. படுக்கை விதிமுறைகள்..!

Published:

train service - 2026

ரயிலில் படுக்கை வசதி தொடர்பாக சில விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது இந்த பெர்த் தங்களுக்கு வேண்டும் என தேர்வு செய்யும் வசதி உள்ளது.

ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் புக்கிங் செய்யும் போதெல்லாம் விரும்பிய பெர்த் உங்களுக்கு கிடைக்காது. தற்போது ரயில் பெட்டிகளில் உள்ள பெர்த் தொடர்பாக சில விதிமுறைகளை இந்திய ரயில்வே வகுத்துள்ளது.

அதனால் ரயில் பயணம் செய்வதற்கு முன் நீங்கள் இந்த விதிமுறைகளை அறிந்து அதன்படி பயணித்தால் மிகவும் நல்லது. பயணத்தின் போதும் இதில் மிடில் பெர்த் கிடைத்தால் தான் நல்லது.

ஏனெனில் கீழ் பெர்த்களை விட மிடில் பர்த்தில் அமர்வதும் தூங்குவதும் மேலே ஏறுவதும் கொஞ்சம் கடினமாக இருக்கும். பெரும்பாலும் கீழ் கிடைத்தால் பயணிகள் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே இருப்பார்கள் தூங்க மாட்டார்கள்.

அவர்கள் தூங்கினால் தான் பெர்த்தை ஓப்பன் செய்து அதில் படுக்க முடியும். அதுபற்றி கேட்டால் சில பயணிகள் இடையே சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்படும்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

இதுபோன்ற சூழ்நிலையில் பயணிகள் ரயில்வே விதிமுமிடில் பெர்த் கொண்ட பயணிகள் ரயில்வேயின் விதிமுறை பற்றி தெரிந்திருந்தால் நல்லது.

தூங்கும் போது சில சமயங்களில் ரயில் கிளம்பி உடன் அதை திறந்து விடுவார்கள். இதனால் கீழ் பெர்த்தில் பயணிப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

ஆனால் ரயில் விதிகளின்படி வீட்டில் பெட்டியில் உள்ள பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பெர்த்தில் தூங்க முடியும் அதையும் தாண்டி தூங்கினால் நீங்கள் அதை தடுக்கலாம். அதுதான் விதிமுறையாகும்.

இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் தூங்கிய பிறகு யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. டிடிஆர் கூட அந்த நேரத்தில் தொந்தரவு செய்யக்கூடாது. இரவு 10 மணிக்கு மேல் பயணத்தை தொடங்கும் இந்த பயணிகளுக்கு இந்த விதி பொருந்தாது.

Related articles

Recent articles

spot_img