இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 உயர்ந்து ஒரு பவுன்ரூ.39,760க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.97 உயர்ந்து ரூ.4,970க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு 5 ஆயிரத்தை நெருங்குவது இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 90 காசு உயர்ந்து ரூ.73.40க்கு விற்பனையாகிறது.
இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதும் பொதுவாக சர்வதேச காரணிகளை கொண்டே நடைபெறுகிறது என தங்கம் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்





