உக்ரைனில் தமிழக மாணவர்களை மீட்க தமிழக குழு விவகாரம்..அண்ணாமலை அறிக்கை

Published:

இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு சிறப்பாக செய்யும் நிலையில் மூன்று எம்.பி.க்கள் அடங்கிய குழுவை நான்கு நாடுகளுக்கு அனுப்ப தமிழக முதல்வர் முடிவு செய்திருப்பது தி.மு.க. அரசின் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது’ என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உக்ரைன் நாட்டின் போர் சூழலில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்பதற்காக பிரதமரின் சீரிய முயற்சியில் இந்திய அரசின் வெளிவிவகார துறையும் இந்திய விமான படையும் துாதரக அதிகாரிகளும் விமான போக்குவரத்து நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தமிழக மாணவர்களை மீட்க மூன்று எம்.பி. ஒரு எம்.எல்.ஏ.வை நான்கு நாடுகளுக்கு அனுப்ப முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பது அறிவாலய தி.மு.க. அரசின் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது. தி.மு.க. அரசின் ஏட்டுச் சுரக்காய் சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

ரயில்வே பாதுகாப்பு துாதரகம் மற்றும் வெளியுறவு போன்ற மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் மாநில அதிகார எல்லைக்குள் வருகிறதா என்பது அறிவாலயம் நபர்களுக்கு புரியவில்லை. தமிழக அரசு அதிகாரிகளுக்குமா தெரியவில்லை? வெளியுறவு துறையில் நீண்ட அனுபவம் மிக்க நான்கு மூத்த அமைச்சர்கள் இந்திய அரசின் சார்பில் நான்கு நாடுகளில் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உலக நாடுகளே வியக்கும்படி அனைத்து மாணவர்களையும் மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசின் மீட்பு குழு சிறப்பாக செயல்படுத்தும் வேளையில் தமிழகம் ஒரு துாது குழுவை அனுப்ப என்ன தேவை? மாநிலங்களுக்கு சம்பந்தம் இல்லாத மீட்பு நடவடிக்கையிலும் தலையிட்டு மாணவர்களின் உயிரோடு விளையாட தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. எதையும் அரசியலாக்கும் முதல்வரின் பொறுப்பற்ற செயல் மீட்பு நடவடிக்கைக்கு இடையூறாகவே இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!
images 36 - 2026

Related articles

Recent articles

spot_img