உபெரில் ஒருநாள் டிரைவராக பணியாற்றிய உபெர் தலைமை செயல் அதிகாரி!

uber - 2026

உபெர் இந்தியா தலைமை செயல் அதிகாரியான பிரப்ஜோத் சிங் உபெர் டாக்சியின் ஓட்டுனராக ஒரு நாள் முழுக்க பணியாற்றி இருக்கிறார்

வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகளை புரிந்து கொள்ளும் வகையில், ஓட்டுனராக பணியாற்றினார். தில்லி மற்றும் குருகிராம் பகுதிகளில் பிரப்ஜோத் சிங் சில வாடிக்கையாளர்களுக்கு ஓட்டுனராக பணியாற்றினார்.

உபெர் லோகோ இடம்பெற்றுள்ள மாருதி சுசுகி டிசையர் மாடலை பிரப்ஜோத் சிங் ஓட்டினார். வழக்கமாக வாடிக்கையாளர்களின் முகவரியை உறுதிப்படுத்திக் கொள்ள ஓட்டுனர்கள் அவர்களுக்கு அழைப்பை மேற்கொள்வர்.

எனினும், பிரப்ஜோத் சிங் இவ்வாறு செய்யாமல், நேரடியாக வாடிக்கையாளர் பயணத்தை உறுதிப்படுத்திக் கொண்டு நேரடியாக அங்கு சென்றுள்ளார். பின் சவாரி முடியும் தருவாயில் தான் உபெர் தலைமை செயல் அதிகாரி என வாடிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

சில வாடிக்கையாளர்கள் தலைமை செயல் அதிகாரியின் செயலை பார்த்து வியப்படைந்தனர். சிலர் தங்களின் அனுபவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சிலர் பிரப்ஜோத் சிங் கூறியதை நம்பாமல், உபெர் தலைமை செயல் அதிகாரி குறித்து கூகுள் தேடல் செய்து பின் அவர் கூறியதை நம்பினர். சிலர் பிரப்ஜோத் சிங்குடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனனர்.

உபெர் எவ்வாறு செயல்படுகிறது என்பதை துவக்கம் முதல் அறிந்து கொள்ளவே பிரப்ஜோத் சிங் இவ்வாறு செய்தார். ஓலா மற்றும் உபெர் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை எளிமையாக்குவதாக கூறினாலும், நிஜத்தில் கள சூழலில் வேறாகவே அமைந்து விடுகிறது.

சமயங்களில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் குறைபாடு அல்லது கூடுதல் கட்டணம் வசூலித்தல் போன்ற பிரச்சினைகள் இதுபோன்ற சேவைகளில் எழுந்துள்ளன.

இந்தியாவில் தலைமை நிர்வாக அளவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் மிகவும் ஆரம்பகட்ட பணியை செய்வது அரிதான காரியமாகவே இருக்கிறது. பிரப்ஜோத் சிங் மேற்கொண்ட இந்த செயல் இணையத்தில் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

Topics

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories