ஆந்திர யாத்திரையில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்…

ஆந்திர மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ள காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனந்தபூர் சென்றடைந்தார்.அனந்தப்பூர் மக்கள் வரவேற்று, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஒரு வார பயணமாக ஆந்திரா சென்றுள்ளார்.காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 16ம் தேதி இரவு காஞ்சிபுரம் மடத்தில் இருந்து பொன்பாடி ஊருக்கு புறப்பட்டு சென்றார். அன்று இரவு, அங்கு தங்கி பூஜை செய்தார். 17ம் தேதி அங்கு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.மாலையில் பவுர்ணமி பூஜை நடந்தது. 18ம் தேதி பவுர்ணமி ஸ்நானம் செய்யப்பட்டது. 19ம் தேதி, அமெரிக்காவைச் சேர்ந்த காமாட்சி ஸ்ரீவித்யா சமிதி நடத்திய, மூக பஞ்சஷதி ஸ்லோகம் நிகழ்ச்சி தொடக்கத்தில், காணொலி காட்சியில் உரையாற்றினார்.

பின், பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின், திருமகள் திரிகால பூஜை செய்தார். அன்று மாலை பொன்பாடியில் இருந்து, ஆந்திர மாநிலம், கடப்பாவிற்கு புறப்பட்டு சென்றார்.இரவு 11:00 மணிக்கு கடப்பாவில் உள்ள அஹோபிலம் மடத்தை சென்றடைந்தார். 20ம் தேதி காலை, பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின், திரிகால பூஜை செய்தார். மாலையில் கடப்பாவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு சென்றார்.

மடத்தில் 21ம் தேதி காலை, திரி கால பூஜை செய்தார். பின் அஹோபிலம் மடத்தில் உள்ள நரசிம்மர் சன்னிதியில், சுவாதி நட்சத்திர சிறப்பு தீபாராதனை நடந்தது. அங்கு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கினார். கடப்பா மாவட்ட அர்ச்சக சமிதியில் உரையாற்றிய சுவாமிகள், அங்கிருந்து தாடிபத்திரிக்கு புறப்பட்டு சென்றார்.

நேற்று முன்தினம், பிராமண சமிதி பவன் மற்றும் தாடிபத்திரியில் உள்ள மற்ற இடங்களுக்குச் சென்று, இரவு 11:45 மணிக்கு அபய ஆஞ்சநேய சுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீமடம் முகாமிற்கு, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்றார்.
பின்னர் அனந்தபூர் சென்றடைந்தார்.

அனந்தப்பூர் மக்கள் வரவேற்று, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அவருக்கு பக்தர்கள் சார்பில், ஸ்வகதா பத்திரிகை வழங்கப்பட்டது. அங்கு, ஹிந்து தர்மம் மற்றும் ஹிந்து சமாஜம் எதிர்கொள்ளும் சமூக விஷயங்களைப் பற்றி, பல்வேறு தலைப்புகளில் சுவாமிகள் பேசினார்.

அங்கு கூடியிருந்த மக்களை தர்ம காரியங்கள் செய்ய ஆசிர்வதித்து, தன் உரையை நிறைவு செய்தார்.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று பல்வேறு பூஜைகளை மேற்கொண்டார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Tamil News large 2990492 - 2026
Tamil News large 2989030 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories