December 6, 2025, 10:24 AM
26.8 C
Chennai

ஆந்திர யாத்திரையில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்…

ஆந்திர மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ள காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனந்தபூர் சென்றடைந்தார்.அனந்தப்பூர் மக்கள் வரவேற்று, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஒரு வார பயணமாக ஆந்திரா சென்றுள்ளார்.காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 16ம் தேதி இரவு காஞ்சிபுரம் மடத்தில் இருந்து பொன்பாடி ஊருக்கு புறப்பட்டு சென்றார். அன்று இரவு, அங்கு தங்கி பூஜை செய்தார். 17ம் தேதி அங்கு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.மாலையில் பவுர்ணமி பூஜை நடந்தது. 18ம் தேதி பவுர்ணமி ஸ்நானம் செய்யப்பட்டது. 19ம் தேதி, அமெரிக்காவைச் சேர்ந்த காமாட்சி ஸ்ரீவித்யா சமிதி நடத்திய, மூக பஞ்சஷதி ஸ்லோகம் நிகழ்ச்சி தொடக்கத்தில், காணொலி காட்சியில் உரையாற்றினார்.

பின், பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின், திருமகள் திரிகால பூஜை செய்தார். அன்று மாலை பொன்பாடியில் இருந்து, ஆந்திர மாநிலம், கடப்பாவிற்கு புறப்பட்டு சென்றார்.இரவு 11:00 மணிக்கு கடப்பாவில் உள்ள அஹோபிலம் மடத்தை சென்றடைந்தார். 20ம் தேதி காலை, பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின், திரிகால பூஜை செய்தார். மாலையில் கடப்பாவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு சென்றார்.

மடத்தில் 21ம் தேதி காலை, திரி கால பூஜை செய்தார். பின் அஹோபிலம் மடத்தில் உள்ள நரசிம்மர் சன்னிதியில், சுவாதி நட்சத்திர சிறப்பு தீபாராதனை நடந்தது. அங்கு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கினார். கடப்பா மாவட்ட அர்ச்சக சமிதியில் உரையாற்றிய சுவாமிகள், அங்கிருந்து தாடிபத்திரிக்கு புறப்பட்டு சென்றார்.

நேற்று முன்தினம், பிராமண சமிதி பவன் மற்றும் தாடிபத்திரியில் உள்ள மற்ற இடங்களுக்குச் சென்று, இரவு 11:45 மணிக்கு அபய ஆஞ்சநேய சுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீமடம் முகாமிற்கு, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்றார்.
பின்னர் அனந்தபூர் சென்றடைந்தார்.

அனந்தப்பூர் மக்கள் வரவேற்று, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அவருக்கு பக்தர்கள் சார்பில், ஸ்வகதா பத்திரிகை வழங்கப்பட்டது. அங்கு, ஹிந்து தர்மம் மற்றும் ஹிந்து சமாஜம் எதிர்கொள்ளும் சமூக விஷயங்களைப் பற்றி, பல்வேறு தலைப்புகளில் சுவாமிகள் பேசினார்.

அங்கு கூடியிருந்த மக்களை தர்ம காரியங்கள் செய்ய ஆசிர்வதித்து, தன் உரையை நிறைவு செய்தார்.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று பல்வேறு பூஜைகளை மேற்கொண்டார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Tamil News large 2990492 - 2025
Tamil News large 2989030 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories