ஆந்திர யாத்திரையில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்…

ஆந்திர மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ள காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனந்தபூர் சென்றடைந்தார்.அனந்தப்பூர் மக்கள் வரவேற்று, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஒரு வார பயணமாக ஆந்திரா சென்றுள்ளார்.காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 16ம் தேதி இரவு காஞ்சிபுரம் மடத்தில் இருந்து பொன்பாடி ஊருக்கு புறப்பட்டு சென்றார். அன்று இரவு, அங்கு தங்கி பூஜை செய்தார். 17ம் தேதி அங்கு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.மாலையில் பவுர்ணமி பூஜை நடந்தது. 18ம் தேதி பவுர்ணமி ஸ்நானம் செய்யப்பட்டது. 19ம் தேதி, அமெரிக்காவைச் சேர்ந்த காமாட்சி ஸ்ரீவித்யா சமிதி நடத்திய, மூக பஞ்சஷதி ஸ்லோகம் நிகழ்ச்சி தொடக்கத்தில், காணொலி காட்சியில் உரையாற்றினார்.

பின், பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின், திருமகள் திரிகால பூஜை செய்தார். அன்று மாலை பொன்பாடியில் இருந்து, ஆந்திர மாநிலம், கடப்பாவிற்கு புறப்பட்டு சென்றார்.இரவு 11:00 மணிக்கு கடப்பாவில் உள்ள அஹோபிலம் மடத்தை சென்றடைந்தார். 20ம் தேதி காலை, பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின், திரிகால பூஜை செய்தார். மாலையில் கடப்பாவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு சென்றார்.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

மடத்தில் 21ம் தேதி காலை, திரி கால பூஜை செய்தார். பின் அஹோபிலம் மடத்தில் உள்ள நரசிம்மர் சன்னிதியில், சுவாதி நட்சத்திர சிறப்பு தீபாராதனை நடந்தது. அங்கு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கினார். கடப்பா மாவட்ட அர்ச்சக சமிதியில் உரையாற்றிய சுவாமிகள், அங்கிருந்து தாடிபத்திரிக்கு புறப்பட்டு சென்றார்.

நேற்று முன்தினம், பிராமண சமிதி பவன் மற்றும் தாடிபத்திரியில் உள்ள மற்ற இடங்களுக்குச் சென்று, இரவு 11:45 மணிக்கு அபய ஆஞ்சநேய சுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீமடம் முகாமிற்கு, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்றார்.
பின்னர் அனந்தபூர் சென்றடைந்தார்.

அனந்தப்பூர் மக்கள் வரவேற்று, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அவருக்கு பக்தர்கள் சார்பில், ஸ்வகதா பத்திரிகை வழங்கப்பட்டது. அங்கு, ஹிந்து தர்மம் மற்றும் ஹிந்து சமாஜம் எதிர்கொள்ளும் சமூக விஷயங்களைப் பற்றி, பல்வேறு தலைப்புகளில் சுவாமிகள் பேசினார்.

அங்கு கூடியிருந்த மக்களை தர்ம காரியங்கள் செய்ய ஆசிர்வதித்து, தன் உரையை நிறைவு செய்தார்.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று பல்வேறு பூஜைகளை மேற்கொண்டார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!
Tamil News large 2990492 - 2026
Tamil News large 2989030 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories