டெல்லியில் இன்று கேரளா முதல்வர் பிரதமர் சந்திப்பு..

Published:

கேரளாவில் சில்வர் லைன் ரயில்வே திட்டத்திற்கு எதிரான போராட்டம் வலுத்து வருஇற நிலையில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கேரளாவில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கேரளாவில் திருவனந்தபுரம் – காசர்கோடு வரை, 529.45 கி.மீ., துாரத்துக்கு அதிவேக ரயில் பாதை அமைக்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.63 ஆயிரத்து 940 கோடி செலவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ள இத்திட்டத்துக்கு, சில்வர் லைன் என பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கேரளாவில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரதமரின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் சந்திப்பு தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

முன்னதாக கேரளாவின் தொழில்துறை முன்னேற்றத்திற்காக கொச்சி- பெங்களூரு தொழில் வழித்தடத்திற்கான நிலம் கையகப்படுத்தும் செயல்முறை வேகமாக முன்னேறி வருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதற்காக மாநில அரசு தற்போதைய சந்தை விலையைவிட நான்கு மடங்கு இழப்பீடு வழங்கும் என்று உறுதியளித்தார்.

மேலும், சில்வர்லைன் திட்டத்தை செயல்படுத்தப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இம்மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், சில்வர்லைன் திட்டத்திற்கு எதிராக கேரளா முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 18-ம் தேதி கோட்டயம் மாதம்பள்ளியில் முதல் பெரிய போராட்டம் நடந்தது.இத் திட்டத்தை எதிர்த்து இன்று வரை போராட்டம் நடந்தது

இந்நிலையில், பிரதமர் மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயனின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

images 2022 03 24T151114.717 - 2026

Related articles

Recent articles

spot_img