மேட்டூர் அருகே இன்று கிணற்றில் விழுந்து பலியான யானை ..

மேட்டூர் அருகே இன்று கிணற்றில் விழுந்த யானை உயிரிழந்த சம்பவம் மேட்டூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வனத்துறை ஏழு மணி நேரம் போராடி இறந்த யானை உடலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஒன்றியத்தில் லக்கம்பட்டி, நீதிபுரம், சின்னதண்டா, பெரிய தண்டா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வன எல்லையை ஒட்டி உள்ளது. இப்பகுதியில் நெல், வாழை, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானைகள் இப்பகுதியில் நடமாடுவது வழக்கம். சில நேரங்களில் யானைகள் அப்பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

நீதிபுரம் பகுதியில் விவசாயி மயில்சாமி என்பவரது தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்தின் கிணற்றில் நள்ளிரவில் ஒரு யானை தவறி விழுந்து விட்டது. கிணற்றில் அதிக அளவில் தண்ணீர் இருந்ததால் சிறிது நேரத்தில் யானை நீரில் மூழ்கி இறந்தது. இன்று காலை தோட்டத்துக்கு சென்ற மயில்சாமி கிணற்றை பார்த்தபோது அங்கு யானை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுபற்றி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானை உடலை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கிணறு ஆழமாக இருப்பதால் யானை உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஜே.சி.பி. எந்திரங்களை வரவழைத்து ஏழு மணி நேரம் கழித்து யானை உடலை வனத்துறையினர் மீட்டனர்.

கிணற்றில் விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் மேட்டூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

images 2022 04 04T171354.097 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories