நீலகிரி மாவட்டம் குன்னுாரில் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் வழித்தடம் மாறி கரிமொரா ஹட்டி கிராமத்திற்கு வந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குன்னுார்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியால் வழித்தடம் அழிக்கப்பட்டது. இதனால், சாலையோர வனப்பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்ட 9 யானைகள் ரன்னிமேடு ரயில்நிலையம் வழியாக, கிளண்டேல் எஸ்டேட் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.
இங்கு 10 நாட்களுக்கும் மேலாக உலா வரும் இந்த யானைகள் நள்ளிரவில் கரோலினா கரி மொரா ஹட்டி கிராமத்திற்கு வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
அங்கு தேயிலை குடோன் தடுப்பு சுவர் உடைத்துள்ளன. கரோலினா குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு வாழை மரங்களை உட்கொண்டன. தொடர்ந்து தேயிலை எஸ்டேட் வழியாக கரும்பாலம் சாலையை கடந்து மீண்டும் கிளண்டேல் எஸ்டேட் பகுதிக்கு சென்றன. வனத்துறையினர் மீண்டும் மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதிக்கு விரட்ட திணறி வருகின்றனர்.
இப்பகுதிக்கு கடந்த வாரம் வந்த 9 காட்டு யானைகள் கல்லார், பர்லியர், ரன்னிமேடு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீருக்காக முகாம் இட்டிருந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று சின்னகரும்பாலம், கிளண்டேல், ரண்ணி மேடு போன்ற பகுதிகளில் முகாம் இட்டிருந்த இந்த யானை கூட்டம், கிளண்டேல், ரண்ணி மேடு போன்ற பகுதிகளில் முகாம் இட்டிருந்த இந்த யானை கூட்டம், சின்னக்கரும்பாலம் வழியாக கரிமெரா கிராமத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் அதிகாலையில் உலா வந்தன.
கடந்த ஐந்து அண்டுகளுக்கு முன்பு இப்பகுதிகளில் வந்த இந்த யானை கூட்டம் கேத்தி பகுதிகளில் ஒருவரை தாக்கி கொன்றதாம். அதன் பிறகு தற்போது மீண்டும் வரத் துவங்கியதால் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குடியிருப்பிற்கு மிக அருகில் சுற்றி வந்த இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிகளில் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வன துறையினரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.





