600 ஆண்டுகள் பழமையான, ரூ.12 கோடி மதிப்புள்ள 3 உலோக சாமி சிலைகள் மீட்பு!

Published:

statue - 2026

புதுச்சேரியில் 600 ஆண்டுகள் பழமையான, 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தொன்மையான 3 உலோக சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள இந்த நடராஜர், சிவன், விஷ்ணு உலோக சிலைகள், தமிழக கோயில்களில் இருந்து 1980-க்கு முன்பாக கடத்தப்பட்டிருக்கலாம் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி தெருவில் ஒரு வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

ஜோசப் கொலம்பினி என்பவரின் வீட்டிலிருந்து இந்த பழமையான நடராஜர் சிலை ஒன்றும், வீணாதாரா சிவன் சிலை ஒன்றும், விஷ்ணு சிலை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சிலைகளின் மதிப்பு சுமார் 12 கோடி என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தின் பழமையான கோவில்களில் இருந்து 1980ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த சிலை திருடப்பட்டதாக இருக்கக்கூடும் என்று முதல் கட்டமாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சிலைகள் எந்த கோவிலை சேர்ந்தது என்பது குறித்து விசாரணை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img