மூன்றே நிமிடங்களில் கொரோனா வைரஸை கண்டறியும் புதிய கருவிக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய பல்வேறு சோதனைகள் செய்யப்படுகிறது என்பதும் இந்த சோதனை முடிவு தெரியாத ஒரு நாள் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 3 நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை அவசர பயன்பாட்டுக்காக அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் இந்த கருவி மூலம் நாள் ஒன்றுக்கு 160 மாதிரிகளை பரிசோதனை செய்யலாம் என்றும் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ள இந்த கருவியை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.