இந்தியாவில் கொரோனா மீண்டும் உயரும் நிலை..

Published:

இந்தியாவில் அடுத்தடுத்து குறைந்து வந்த கொரோனா மீண்டும் உயரும் நிலை ஏற்பட்டது.இதனால் பலரும் அச்சமடைந்துள்ளனர்‌

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 2,183 பேருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டு 214 பேர் பலியாயினர்.

இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

புதிதாக 2,183 பேர் பாதித்துள்ளனர்.
இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,44,280 ஆக உயர்ந்தது.புதிதாக 214 பேர் இறந்துள்ளனர்.
இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,965 ஆக உயர்ந்தது.தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,985 பேர் குணமடைந்துள்ளனர்.இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,10,773 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்தே வருகிறது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத்துறை வெளியீட்டில் கொரோனா நிலவரம் குறித்து தமிழககத்தில் மொத்தம் 30 பேர் பாதித்து மொத்த பாதிப்பு – 34,53,263 ஆக உள்ளது.குணமடைந்தவர்கள் – 24 எனவும் உயிரிழப்பு ஏதுமில்லை என தெரிவிக்கப்படாடுள்ளது.

images 54 1 - 2026

Related articles

Recent articles

spot_img