பழிக்குபழி வாங்கிய சிறுவன்! ஐபிஎல் மைதானத்தில் நடந்த சம்பவம்!

boy 1 - 2026

ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய போட்டியாக கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெரும் பரபரப்புக்கு இடையே நடந்து முடிந்துள்ளது.

தல தோனி, நீண்ட நாட்களுக்குப் பிறகு கடைசி ஓவர் கடைசி பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றித் தேடித் தந்து, உலகின் தலைச்சிறந்த பினிஷர் நான் தான் என்பதை நிரூபித்தார்.

இந்த ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, இப்போட்டியில் இருந்து வெற்றிக் கணக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மும்பை ரசிகர்களும் ரோகித் படையை வெகுவாக நம்பியிருந்தனர். அவர்களின் நம்பிக்கையும் 19வது ஓவர் வரை நீடித்தது. ஆனால், ஒரே ஒரு ஓவரில் அவர்களின் நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்தெறிந்தார் தோனி.

முதல் வெற்றியை பெற்றுவிடுவோம் என காத்திருந்த மும்பை ரசிகர்களுக்கு இது பேரிடியாக அமைந்தது. மைதானத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கூட, இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதாவது தோனி களத்தில் இருப்பதை மறந்துவிட்டு முன்கூட்டியே வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

அதோடு நிறுத்திக் கொள்ளாமல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறுவனிடம் சென்று, வெற்றி பெற்றதுபோல் சேட்டை செய்து களேபரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், அப்போது பொறுமையாக இருந்த அந்த சிறுவன், சென்னை வெற்றி பெற்றதும், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் செய்த சேட்டையை, அவர்கள் இடத்துக்கே சென்று செய்து காட்டி மொக்கை செய்துள்ளார்.

இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் முன்பு அவர் ஆடும் ஆட்டம் காண்போரை வெகுவாக சிரிக்க வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories