தஞ்சை களிமேடு தேர்விபத்து-ஒரு நபர் கமிஷன் விசாரணை துவக்கம்..

தஞ்சை அருகே உள்ள களிமேட்டில் கடந்த 27ந் தேதி நள்ளிரவில் அப்பர்சாமி தேர் திருவிழாவில் தேரின் உச்சிப்பகுதி உயர்அழுத்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் இறந்த சம்பவம் குறித்து வருவாய்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் குழுவினர் இன்று விசாரணை நடத்தினர்.

இன்று மதியம் வருவாய்துறை செயலாளர் குமார்ஜெயந்த் தஞ்சை வந்தார். பின்னர் அவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர் விபத்து தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதையடுத்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தி தகவல்களை குறித்து கொண்டார்.

இதனை தொடர்ந்து சம்பவம் நடந்த இடமான களிமேட்டுக்கு வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த் சென்றார். உடன் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா மற்றும் மாவட்ட அதிகாரிகளும் வந்தனர்.

முதலில் தீயில் கருகிய தேரை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர் எந்த அளவுக்கு சேதமாகி உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை குறிப்பெடுத்தனர். பின்னர் சாலையில் இருந்து உயர்அழுத்த மின்கம்பி எந்த உயரத்தில் செல்கிறது? என அளவீடு செய்து தேரை நிலைநிறுத்தும்போது எப்படி உச்சிப்பகுதி மின்னழுத்த கம்பியில் பட்டது என்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விபத்து நடந்தபோது எந்த மாதிரியான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்பு துறை உடனடியாக வந்து மீட்பு நடவடிக்கை மேற்கொண்டனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை திரட்டினர். தொடர்ந்து அந்த குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

kalimedu1 - 2026
kalimedu3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories