டீக்கடைகளில் 481 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்!

tea - 2026

திருச்சியில் பேக்கரி மற்றும் டீக்கடையில் உணவு பாதுகாப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 481 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள கடைகளில் கலப்பட டீ தூள் பயன்படுத்துவதாக, உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் மருத்துவர் ரமேஷ் பாபு தலைமையிலான குழுவினர் செவ்வாய்கிழமை இரவு கே.கே.நகர் பகுதியில் பிரபல பேக்கரி மற்றும் தேநீர் கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வின்போது 2 இடங்களிலும் சுமார் 6 கிலோ கலப்பட டீ தூள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், கே.கே.நகர் சீதாதேவி கோயில் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் என்பரிடம் 75 கிலோ கலப்பட தேயிலை தூளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறையினர், தொடர்ந்து, புஷ்பராஜின் சகோதரர்கள் பொன்னகர் கருணாகரன் என்பவரிடமிருந்து 240 கிலோ கலப்பட தேயிலைத்தூளையும், விஜயகுமார் என்பவரிடம் இருந்து சுமார் 160 கிலோ கலப்பட தேயிலை தூளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், கலப்படத்திற்கு பயன்படுத்தும் ரசாயன பொருட்கள் என 481 கிலோ கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக 4 பேரின் மீது வழக்கு தொடர்வது தொடர்பாக 8 சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், கலப்பட தேயிலை தூளை விற்பனை செய்வது தெரியவந்தால், உணவு பாதுகாப்புத்துறையை அணுக வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories