ட்விட்டரில் பாலோயர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஐயோ இதற்கு நான் பதில் சொன்னால், என்னை திட்டுவார்கள் என நகைச்சுவையாக ஆனந்த் மகிந்திரா பதில் அளித்துள்ளார்.
மகிந்திரா குழுமத்தின் தலைவராக உள்ளவர் ஆனந்த் மகிந்திரா, இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது புதிய படைப்பாளிகளையும் திறமைசாலிகளையும் உலகிற்கு அடையாளம் காட்டி வருகிறார்.
அது போல் நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கிறார். நெட்டிசன்கள் பதிவிடும் விஷயங்களில் தன்னை ஈர்க்கும் விஷயங்களை ரீட்வீட் செய்து பாராட்டவும் செய்கிறார்.
இந்த நிலையில் ஸ்கார்பியோ கார் எப்போது லாஞ்ச் செய்வீர்கள் என்ற கேள்விக்கு ஆனந்த் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். “சார் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். ஸ்கார்பியோ கார் எப்போது விற்பனைக்கு வரும் என நெட்டிசன் ஒருவர் ஆனந்த் மகிந்திராவிடம் கேட்கிறார்.
அதற்கு ஆனந்த் மகிந்திரா, ஷ்ஷ்ஷ்.. அதை மட்டும் சொன்னால் என்னை திட்டுவார்கள், வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள். உங்களை போல் நானும் ஸ்கார்பியோவுக்காக காத்திருக்கிறேன். இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும் என நகைச்சுவையாக சொல்கிறார் ஆனந்த் மகிந்திரா.
இதற்கு இன்னொரு நெட்டிசன் ஒருவர் சார் நீங்கள் போட்ட ட்வீட் செம காமெடியாக உள்ளது. சிறந்த நகைச்சுவை ட்வீட் என பாராட்டியுள்ளார்.
தன்னை வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள் என ஆனந்த் கூறியிருப்பதை சுட்டிக் காட்டிய நெட்டிசன் ஒருவர் சார், மகிந்திராவின் ராஜா நீங்கள். ஒவ்வொரு இந்தியர்களின் மனதிலும் வாழ்கிறீர்கள். உங்களை யார் சார் வேலையை விட்டு தூக்குவார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னொருவர் சார் இந்த நிறுவனத்தையே அடித்தளத்திலிருந்து கட்டமைத்த நபரை யாராவது வேலையை விட்டு தூக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்களை நீங்களே வேலையை விட்டு தூக்கி கொண்டால்தான் உண்டு, உங்களை யார் வேலையை விட்டு தூக்குவார்கள் என்கிறார் இன்னொரு நெட்டிசன்.
Sshhhh. If I tell you, I’ll be fired… But I can say this much..I’m as excited as you are… https://t.co/6EnseHYZDE
— anand mahindra (@anandmahindra) May 6, 2022