சீண்டிய நபரிடம் காண்டான நாய்.‌!

Published:

dog 2 - 2026

அமைதியாக இருக்கும் நாய் ஒன்றை ஒருவர் வம்பிழுக்கிறார். அமைதியாக இருக்கும் நாய், ஒருகட்டத்துக்கும் மேல் பொறுமையை இழந்துவிடுகிறது.

மேலும், வம்பிழுத்தவரை தாறுமாறாக நொடிப் பொழுதில் கடித்து பிராண்டி விடுகிறது. வீடியோவை பார்ப்பவர்களுக்குக் கூட அந்த நாய் மீது வெறுப்பு வரவில்லை.

அந்த வீடியோவில் நண்பர் ஒருவர் நாயுடன் வாக்கிங் வந்திருக்கிறார். இன்னொருவர் நாயுடன் வந்தவருடன் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.

கையில் செடியின் கிளை ஒன்றை வைத்திருக்கும் அவர், அதனைக் கொண்டு நாயை சீண்டிக் கொண்டே இருக்கிறார். நாய் அமைதியாக இருக்கிறது. இதன்பிறகு அந்த கிளை மூலம் ஓங்கி வேகமாக அடிக்கிறார்.

அவ்வளவு தான். அடுத்த நொடி நாய்க்கு கோபம் பீறிட்டிக் கொண்டு வந்து, அடித்த நபரை தாறுமாறாக பிராண்டி விடுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும், தன்வினை தன்னைச் சுடும் என்றும், கர்மா திருப்பிக் கொடுக்கிறது என்றும் கமெண்ட் அடித்துள்ளனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img