மே 15 இல் வானில் இருந்து பூமிக்கு அருகில் வரும் விண்கல்..!

asteroid - 2026

ஒரு விண்வெளி அதிசயம், வரும் மே 15ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
வானத்திலிருந்து ஒரு விண்கல், மணிக்கு சுமார் 37,400 கிலோமீட்டர் வேகத்தில் நம் பூமிக்கு மிக அருகில் வரவிருப்பதாக அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இந்த எரிகல், அமெரிக்காவில் உள்ள பிரம்மாண்டமான எம்பயர் கட்டடத்தின் அளவுக்கு பெரிதாக இருக்கும் என்றும் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

388945 (2008 TZ3) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிகல் தொடர்ந்து பூமியைச் சுற்றி வருகிறது. இந்த எரிகல் வரும் மே 15ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பூமிக்கு மிக அருகில் வரவிருக்கிறது.

நாசாவின் நியர் எர்த் ஆப்ஜெக்ட் (என்.இ.ஓ) என்றழைக்கபப்டும் அமைப்பு இந்த எரிகல் சுமார் 1,150 அடி முதல் 2,560 அடி விட்டம் கொண்டதாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.

இந்த எரிகல், பூமியில் இருந்து சுமார் 3.2 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் புவியைக் கடக்கும் என்றும், இதனால் பூமியில் உள்ள மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

என்ன தான் மனிதர்களுக்கு ஆபத்து இல்லை என்றாலும், இந்த எரிகல்லை நாசா தொடர்ந்து கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டு இதே எரிகல் பூமியில் இருந்து 1.7 மில்லியன் மைல் தொலைவில் கடந்தது குறிப்பிடத்தக்கது.

பூமி எப்படி சூரியனைச் சுற்றி வருகிறதோ, அப்படி எரிகற்களும் பூமியைச் சுற்றி வருகின்றன. அப்படி வட்டமடித்து வரும் எரிகற்களில் 388945 (2008 TZ3) எரிகல்லும் ஒன்று.

இந்த எரிகல் வரும் 2024ஆம் ஆண்டு மீண்டும் பூமிக்கு மிக அருகில் வரும். ஆனால் சுமார் 6.9 மில்லியன் மைல் தொலைவிலேயே புவியைக் கடந்து விடும்.

மீண்டும் இந்த எரிகல், இப்போது வருவது போல பூமிக்கு மிக நெருக்கமாக வர வேண்டுமானால், மனிதர்கள் குறைந்தபட்சம் 2163ஆம் ஆண்டு வரையாவது காத்திருக்க வேண்டும் என அறிவியல் சமூகம் கூறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories