17 வயது சிறுவன் உருவாக்கிய பாட்கள்.. சுற்றி வளைத்த சைபர் கிரைம் போலீஸ்!

Bomb - 2026

மத்திய பிரதேச மாநிலத்தின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை விசாரிக்க சேலம் விரைந்தனர்.

சம்பந்தப்பட்ட சிறுவன் உருவாக்கிய பாட்கள் போபால் மற்றும் பெங்களூருவை சேர்ந்த பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் மென்பொருள் துறையில் ஆர்வம் மிக்கவர் ஆவார். இவர் பைத்தான் ப்ரோகிராமிங் மூலம் உருவாக்கிய பாட் ஒன்றை, தனக்கு டெலிகிராம் மூலம் அறிமுகமான வெளிநாட்டவருக்கு 200 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரத்து 541 விலைக்கு இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் விற்பனை செய்து இருக்கிறார்.

பள்ளி மாணவரிடம் பாட்-ஐ வாங்கிய நபர் தான் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கு காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இண்டர்நெட் பாட், இணைய ரோபோட், ரோபோட் அல்லது பாட் என்பது மென்பொருள் செயலி ஆகும்.

இது இணையத்தில் தானியங்கி முறையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட செயல்முறைகளை சரியாக பின்பற்றும். இது மனிதனுக்கு மாற்றாக இணைய பணிகளை மேற்கொள்ளும். இதை கொண்டு அதிகளவு குறுந்தகவல்களை அனுப்ப முடியும்.

முன்னதாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த போபால் போலீஸ் குழுவினர் மே 16 ஆம் தேதி வாக்கில் சேலம் வந்தனர்.

அங்கு பாட்-ஐ விற்பனை செய்த மாணவரின் வீட்டிற்கு சென்று பெற்றோரை சந்தித்து நடந்த சம்பவம் பற்றி விளக்கினர். வீட்டிற்கு போலீசார் வருவதை பார்த்து அதிர்ந்து போன மாணவரின் தாய் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

அதன் பின் மாணவரை விசாரணைக்காக போபால் அழைத்து வர போலீசார் தெரிவித்துள்ளனர்.:

“காவல் துறை குழுவினர் அங்கு சென்றதும், பெற்றோர் தங்களுக்கு இதுபற்றி எந்த விவரமும் தெரியாது என பதில் அளித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட சிறுவன் மைனர் என்பதால் அவரை கைது செய்யவில்லை. அந்த மாணவர் திறமை மிக்க பைத்தான் ப்ரோகிராமர் ஆவார். தான் உருவாக்கிய பாட் இதுபோன்ற தீய செயலுக்கு பயன்படுத்தப்படும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.”

“மாணவரிடம் டெலிகிராமில் தொடர்பு கொண்டு பாட்-ஐ வாங்கிய நபர் யார் என விசாரணை செய்து வருகிறோம். மேலும் இது போன்று வேறு ஏதேனும் பாட்களை மற்றவர்களுக்கும் விற்பனை செய்து இருக்கிறாரா என மாணவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரிகள் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது,” என குற்றப் பிரிவு டி.சி.பி. அமித் குமார் தெரிவித்து இருக்கிறார்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories