17 வயது சிறுவன் உருவாக்கிய பாட்கள்.. சுற்றி வளைத்த சைபர் கிரைம் போலீஸ்!

Bomb - 2026

மத்திய பிரதேச மாநிலத்தின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை விசாரிக்க சேலம் விரைந்தனர்.

சம்பந்தப்பட்ட சிறுவன் உருவாக்கிய பாட்கள் போபால் மற்றும் பெங்களூருவை சேர்ந்த பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் மென்பொருள் துறையில் ஆர்வம் மிக்கவர் ஆவார். இவர் பைத்தான் ப்ரோகிராமிங் மூலம் உருவாக்கிய பாட் ஒன்றை, தனக்கு டெலிகிராம் மூலம் அறிமுகமான வெளிநாட்டவருக்கு 200 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரத்து 541 விலைக்கு இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் விற்பனை செய்து இருக்கிறார்.

பள்ளி மாணவரிடம் பாட்-ஐ வாங்கிய நபர் தான் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கு காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இண்டர்நெட் பாட், இணைய ரோபோட், ரோபோட் அல்லது பாட் என்பது மென்பொருள் செயலி ஆகும்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இது இணையத்தில் தானியங்கி முறையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட செயல்முறைகளை சரியாக பின்பற்றும். இது மனிதனுக்கு மாற்றாக இணைய பணிகளை மேற்கொள்ளும். இதை கொண்டு அதிகளவு குறுந்தகவல்களை அனுப்ப முடியும்.

முன்னதாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த போபால் போலீஸ் குழுவினர் மே 16 ஆம் தேதி வாக்கில் சேலம் வந்தனர்.

அங்கு பாட்-ஐ விற்பனை செய்த மாணவரின் வீட்டிற்கு சென்று பெற்றோரை சந்தித்து நடந்த சம்பவம் பற்றி விளக்கினர். வீட்டிற்கு போலீசார் வருவதை பார்த்து அதிர்ந்து போன மாணவரின் தாய் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

அதன் பின் மாணவரை விசாரணைக்காக போபால் அழைத்து வர போலீசார் தெரிவித்துள்ளனர்.:

“காவல் துறை குழுவினர் அங்கு சென்றதும், பெற்றோர் தங்களுக்கு இதுபற்றி எந்த விவரமும் தெரியாது என பதில் அளித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட சிறுவன் மைனர் என்பதால் அவரை கைது செய்யவில்லை. அந்த மாணவர் திறமை மிக்க பைத்தான் ப்ரோகிராமர் ஆவார். தான் உருவாக்கிய பாட் இதுபோன்ற தீய செயலுக்கு பயன்படுத்தப்படும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.”

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

“மாணவரிடம் டெலிகிராமில் தொடர்பு கொண்டு பாட்-ஐ வாங்கிய நபர் யார் என விசாரணை செய்து வருகிறோம். மேலும் இது போன்று வேறு ஏதேனும் பாட்களை மற்றவர்களுக்கும் விற்பனை செய்து இருக்கிறாரா என மாணவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரிகள் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது,” என குற்றப் பிரிவு டி.சி.பி. அமித் குமார் தெரிவித்து இருக்கிறார்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories