நாமக்கல் அருகே கொல்லிமலையில் ஜிடிஆர் அரசு பள்ளியில் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் அதிகம் கண்டுபிடிக்க ப்பட்டநிலையில்
தேர்வு பணியில் ஈடுபட்ட அனைவரும் கூண்டோடு விடுவிக்கப்பட்டு 11பேரும் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் தேர்வு மையங்களில் பணியாற்றி வந்த அறை கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டு புதிய கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்தநிலையில் கொல்லிமலையில் பிட் பேப்பர் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று 11 தேர்வறை கண்காணிப்பாளர்களை சஸ்பென்ட் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.





