ஜூன் 21 முதல் ஸ்ரீ ராமாயண யாத்ரா..!

Ramayan yatra - 2026

இந்திய ரயில்வே சார்பாக ஜூன் 21 முதல் “ஸ்ரீ ராமாயண யாத்ரா” ரயில் சேவை தொடங்க இருக்கிறது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) 18 நாள் ஸ்ரீ ராமாயண யாத்திரையை ஜூன் 21ஆம் தேதி சிறப்பு சுற்றுலா ரயிலுடன் துவங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஐஆர்சிடிசி, லக்னோவின் முதன்மை மண்டல மேலாளர் அஜித்குமார் சின்ஹா ​​செய்தியாளர்களிடம் பேசியதாவது “ஜூன் 21ம் தேதி தில்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ராமாயண சர்க்யூட்டின் “பாரத் கவுரவ் டூரிஸ்ட் ரயில்” பயணத்திற்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளது.

சுமார் 600 பயணிகள் தங்கும் வசதியுடன் 11 மூன்றாம் ஏசிவகுப்பு பெட்டிகளைக் உடைய ரயிலில் 18 நாள் பயணத்திற்கு 1 பயணிக்கு ரூபாய் 62,370 செலவாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமர், அவரது மனைவி சீதா தேவி மற்றும் லக்ஷ்மணன் போன்றோர் 14 வருடங்கள் காட்டில் வனவாசம் செய்துகொண்டு காலடி எடுத்து வைத்த பக்தர்களின் கனவுகளை நனவாக்கும் அடிப்படையில் இச்சுற்றுலா தொகுப்பு இருக்கிறது என சின்ஹா ​​கூறினார்.

அயோத்தி, ஜனக்பூர் (நேபாளம்), சீதாமர்ஹி, பக்சர், வாரணாசி, பிரயாக்ராஜ், ஷிரிங்வெர்பூர், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் மற்றும் பத்ராசலம் ஆகிய முக்கியமான இடங்களை உள்ளடக்கிய ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்ட ராமாயண சுற்றுவட்டத்தில் இந்த ரயில் இயக்கப்படும்.

இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா ரயில் ஒன்று சென்று அயோத்தி மற்றும் ஜனக்பூர் போன்ற 2 மத நகரங்களை இணைப்பது முதல் முறையாகும் என சின்ஹா ​​தெரிவித்தார்.

மேலும் தில்லியைத் தவிர அலிகார், துண்ட்லா, கான்பூர் மற்றும் லக்னோ போர்டிங் பாயின்ட்டுகள், ரயில் நிலைய பயணிகள் பலகைகளைப் பொருட்படுத்தாமல் டிக்கெட்டின் விலையானது ஒரே மாதிரியாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

இந்த பயணத்திட்டத்தில் உணவு, ஹோட்டலில் தங்குதல் மற்றும் வருகை தரும் இடங்களில் வழிகாட்டும் சேவைகள் போன்றவை அடங்கும் என சின்ஹா ​​கூறினார்.

ஏறத்தாழ 8,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து 18 வது நாளில் டெல்லிக்கு திரும்பும் பாரத் கவுரவ் டூரிஸ்ட் ரயிலின் உட்புறங்கள் ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து முன்பே 285 முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 61 முன்பதிவுகள் மகாராஷ்டிராவிலிருந்தும், 55 உத்தரபிரதேசத்திலிருந்தும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சின்ஹா ​​கூறினார்.

இதனிடையில் ஐஆர்சிடிசி ஆனது பயணிகளுக்கு EMI விருப்பங்களை வழங்குவதற்காக பேடிஎம் மற்றும் ரேசார்பே கட்டண நிறுவனங்களுடன் இணைந்து இருக்கிறது.

மேலும் முதல் 50 சதவீத பயணிகளுக்கு 5% பயணக்கட்டண சலுகை வழங்கப்படும். ஐஆர்சிடிசி வழங்கிய EMI கட்டண விருப்பமும் முதல் முறையாகும் என சின்ஹா ​​தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories