வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி ஆவணம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட பெண் மேலாளர் உமா மகேஸ்வரி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
வேலுார் மாவட்டம், வேலுார் அரியூரை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, 38. இவர், வேலுார் மத்திய கூட்டுறவு வங்கி, வேலுார் கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.கடந்த, 2018 – 19ல் குடியாத்தம் கிளையில் மேலாளராக பணியாற்றியபோது, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கியதாக, போலி ஆவணங்கள் தயாரித்து, 97.37 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி புகார்படி, வேலுார் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கியதாக, 97 லட்சம் ரூபாய் மோசடி செய்தது உறுதியான நிலையில் வேலுார் மத்திய கூட்டுறவு வங்கியின் பெண் மேலாளரை, வணிக வரி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணம் தயாரித்து ரூ.97.37 லட்சம் மோசடி செய்ததாக உமா மகேஸ்வரியை போலீசார் கைது செய்த நிலையில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.





