பிந்துமாதவ் கோயிலில் ஆலம் கீர் தர்ஹரா மசூதி! தடை விதிக்க மனு!

Alam Keer Darhara Mosque - 2026

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கியான்வாபி மசூதி வழக்கில் நடைபெற்ற விசாரணை ஜூலை 4-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மதுராவின் கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலுக்கு அருகிலுள்ள ஷாயி ஈத்கா மசூதி மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டு நடைபெறுகின்றன.

மேலும், தில்லி மற்றும் போபாலின் ஜாமியா மசூதிகள் மற்றும் குதுப் மினார் ஆகியவையும் இந்து கோவில் மேல் உருவாகி உள்ளது.

இந்த சூழலில், வாரணாசியின் பஞ்ச்கங்கா கட் பகுதியில் உள்ள ஆலம் கீர் தர்ஹரா மசூதி, அங்கிருந்த பிந்து மாதவ் கோயிலை இடித்து கட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி ஆகாஷ் வர்மா முன் ஆலம் கீர் தர்ஹரா மசூதிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் வசிக்கும் அதுல் குல் ஆதி உள்ளிட்ட 5 பேர் நீதிமன்றத்தில் நேற்று மனு அளித்துள்ளனர்.

இதில், தர்ஹரா மசூதி நிர்வாகிகள் சாதிக் அலி, ஜமால் மற்றும் முன்னா ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவை நீதிபதி ஆகாஷ் வர்மா, ஜூலை 4-ம் தேதி விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மனுவில், அதுல் குல்லின் வழக்கறிஞர் ரானா ஆனந்த் ஜோதி குறிப்பிடுகையில், ”தற்போது மசூதியுள்ள இந்த இடத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக பிந்துமாதவ் கோயில் இருந்தது. இதனால், அந்த மசூதியை மாதவராவ் தர்ஹரா மசூதி எனவும் அழைப்பது உண்டு. அங்கிருந்த கோயிலில் மஹா விஷ்ணுவை இந்துக்கள் ஆரத்தியுடன் தரிசித்து வந்தனர்.

இதை இடித்து 1669-ல் அவுரங்கசீப்பால் மசூதி கட்டப்பட்டுவிட்டது. அப்போது முதல் அதில் சட்டவிரோதமாக தொழுகையை முஸ்லிம்கள் நடத்துகின்றனர். இதை இந்துக்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆலம் கீர் மசூதியானது முஸ்லிம் மற்றும் இந்துக்களின் கட்டிட அமைப்பில் அமைந்துள்ளது. இதன் மீது உயரமாக இருந்த 2 மினார்களில் ஒன்று, 1948-ல் இடிந்து விழுந்து சிலர் உயிரிழந்தனர்.

ஜேம்ஸ் ஸ்மித் என்ற ஆங்கிலேயர் அதில் பராமரிப்பு பணி செய்தும் பலனளிக்கவில்லை. இதனால், பாதுகாப்பு கருதி மற்றொரு மினாரையும் அரசே இடித்துவிட்டது. தற்போது இந்த மசூதி மீது 3 குவிமாடங்கள் அமைந்துள்ளன.

சிவ வழிபாட்டின் சைவ பிரிவினருக்கு பெயர் பெற்றது வாரணாசி. இங்கு வைணவ பிரிவினரும் வாழ்கின்றனர். இவர்கள் வாரணாசியின் ஆலம் கீர் மசூதி அமைந்த பஞ்ச்கங்கா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இங்கு ராமானந்த் ஆச்சார்யாவின் ஸ்ரீமத்மடமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories