சேலம் – நாமக்கல் சாலையில் விபத்து போலீசார் இருவர் பலி..

சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் டிராவல்ஸ் வாகனம் மோதிய விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஒருவரும் பரிதாபமாக இன்று உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த மற்றொரு காவலர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .25 லட்சம் நிதியுதவி தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது .

ராசிபுரம் அருகே சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அணைப்பாளையம் பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. வாகனப் போக்குவரத்து வசதிக்காக அப்பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அவ்வழியாக திருநெல்வேலியில் இருந்து ஒசூர் நோக்கிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது.

தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினர் மற்றும் ராசிபுரம் காவல் நிலைய காவலர் தேவராஜன் மற்றும் புதுச்சத்திரம் காவல் நிலைய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சந்திரசேகர், பழனி, காவலர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது திருநள்ளாரில் இருந்து சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நோக்கி அதிவேகமாக சென்ற டிராவல்ஸ் வேன் விசாரணை நடத்திக் கொண்டிருந்த காவலர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராசிபுரம் காவலர் தேவராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகர், மணிகண்டன் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனினும், மருத்துவமனை செல்லும் வழியில் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் உயிரிழந்தார். மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டிராவல்ஸ் வேனில் பயணித்த மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது .உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கவும் முதல் – அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


812869 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories