பெருமாள் மலை பிரமோற்சவ விழா- பிரசன்ன வெங்கடாஜலபதி தேரில் பவனி..

துறையூர் அருகே பிரசித்தி பெற்ற பெருமாள்மலை பிரமோற்ச விழாவின் முக்கிய நிகழ்வான 9ம் நாள் தேர் திருவிழாவில் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி உபய நாச்சியரோடு தேரில் எழுந்தருளி கிரிவலப் பாதையில் பவனி சென்றார்.

துறையூர் அருகே 3 கிமீ தொலைவில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் பெருமாள்மலை உள்ளது. மலை மீது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உபய நாச்சியார்கள் ஸ்ரீதேவி பூதேவி சமேத அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரமோற்சவ விழா 11 நாட்கள் நடைபெறும். நிகழாண்டில் கடந்த 4ம் தேதி பிரமோற்சவ விழா கொடியேற்ற நிகழ்வுடன் தொடங்கியது. இவ்விழாவையொட்டி மலையிலிருந்து உற்சவ மூர்த்தி பெருமாள் உபய நாச்சியார்கள், ஆழ்வார்களுடன் கீழிறங்கி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் கொழுவிருந்தும், அன்ன, யானை, கருட, சிம்ம வாகனத்திலும், இந்திர விமானத்திலும் முறையே ஒவ்வொரு நாளும் கிரிவலப்பாதையில் வீதி உலா சென்றும் பொதுமக்களுக்கு அருள்பாலித்தார்.

பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான 9ம் நாள் தேர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
துறையூர் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமார் முசிறி எம்எல்ஏ ந. தியாகராஜன்(முசிறி), அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுடன் சேர்ந்து தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்ட விழாவைத் தொடக்கி வைத்தனர்.
திரளான மக்கள் கலந்து கொண்டனர். கிரிவலப் பாதையில் வழி நெடுக ஆங்காங்கே பக்தர்கள் தேரில் பவனி சென்ற பெருமாளுக்கு தேங்காய் பழம் வெற்றிலைப் பாக்கு கொண்டு சிறப்பு செய்து குடும்பத்தினருடன் வழிபட்டனர்.

IMG 20220612 WA0056 1 - 2026
IMG 20220612 WA0055 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories