பொதுமக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடை அணிய உரிமை உண்டு-பினராயி விஜயன்

கேரளாவில் கருப்பு முக கவசம் அணிய தடை இல்லை என்றும், பொய் பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரளாவில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக சுவப்னா சுரேஷ் புகார் கூறினார். இதையடுத்து பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரளாவின் பல பகுதிகளில் பினராயி விஜயன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், எதிர்கட்சியினர் கருப்பு கொடி காட்டியும், கருப்பு உடை அணிந்தும், கருப்பு நிற முக கவசம் அணிந்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதைதொடர்ந்து கருப்பு முக கவசம், கருப்பு உடை அணிய தடை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. மேலும் தேவையில்லாமல் போலீசார் முதல்-மந்திரி செல்லும் வழிகளில் பொதுமக்களின் போக்குவரத்தை முடக்குவதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று கவர்னர் ஆரிப் முகம்மது கான் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று கண்ணூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்- மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

பொதுமக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடை அணிய உரிமை உண்டு. அதே போல் கருப்பு நிற முக கவசம் அணிய எந்த தடையும் இல்லை. இதுதொடர்பாக பொய்யான பிரசாரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை. அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். கேரளாவில் சாலையில் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. அதனை தடுக்க எந்த சக்திக்கும் அதிகாரம் இல்லை என்று அவர் கூறினார். போராட்டம் இதற்கிடையே நேற்று திருவனந்தபுரத்தில் பா.ஜனதா மகிளா மோர்ச்சா பெண்கள் அமைப்பினர் கருப்பு உடை அணிந்து வந்து முதல்-மந்திரிக்கு எதிராக பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல் கண்ணூர் தளிப்பரம்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற முதல்-மந்திரிக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் மகிளா மோர்ச்சா சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, கருப்பு கொடி காட்ட முயன்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் நிகழ்ச்சி நடைபெற இருந்த இடம் நோக்கி பேரணியாக சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை போலீசார் தண்ணீரை பீச்சியடித்து கலைத்தனர். அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
images 95 - 2026
731922 pina - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories