கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்த பாஜக கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு..

டெல்லி புறப்படுவதற்கு முன்பு,
கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்த பாஜக கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு பலரையும் ஈர்த்துள்ளார்.

Tamil News large 3059299 - 2026

தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஒடிசா மாநிலம் ரெய்ரங்பூர் பகுதியில் உள்ள ஜெகந்நாதர், ஹனுமன், சிவன் கோயில்களுக்குச் சென்ற குடியரசுத் தலைவர் தேர்தல் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு, கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு (64) போட்டியிடுவார் என்று அக்கட்சி செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், டெல்லி புறப்படுவதற்கு முன்பு, தான் முதன் முதலாக 2000ஆவது ஆண்டில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ரெய்ரங்பூர் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களுக்கும் சென்று திரௌபதி முர்மு வழிபாடு நடத்தினார்.புரந்தேஸ்வரி சிவன் கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்தார். வழிபாடுகளை முடித்துக் கொண்டு அவர் புவனேஸ்வரம் வழியாக தில்லி வந்து, சனிக்கிழமை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யவிருக்கிறார்.

குடியரசுத் தலைவராக இவர் தேர்வானால் நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் அவரது சொந்த மாநிலமான ஒடிஸாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று பாஜக கருதுகிறது.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளான, ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம், ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவற்றின் ஆதரவும் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது.

 பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்கிடையே, நேற்று இரவு இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் தில்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.பி. நட்டா, “நாடு முழுவதும் உள்ள சுமார் 20 முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கிழக்கு இந்தியாவில் இருக்கும் தலைவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக ஒடிஸாவை சேர்ந்த பழங்குடியினப் பெண் தலைவரான திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்த பின்புதான் திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார்’ என்றார்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

ஒடிஸாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான மயூர்பஞ்சில் உள்ள பய்டாபோசி கிராமத்தில் 1958, ஜூன் 20-ஆம் தேதி திரௌபதி முர்மு பிறந்தார். சாந்தல் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவரான திரௌபதி தனது அரசியல் வாழ்க்கையை மாநகராட்சி கவுன்சிலராக தொடங்கினார். ராய்ரங்பூர் தேசிய ஆலோசனை கவுன்சில் துணைத் தலைவராகப் பதவி வகித்தார்.

2013-இல் பாஜக பழங்குடியினர் பிரிவின் துணைத் தலைவராக திரௌபதி முர்மு பதவி வகித்துள்ளார். ஒடிஸாவின் ராய்ரங்பூர் தொகுதியில் இருந்து பாஜக எம்எல்ஏவாக அவர் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக கூட்டணியுடன் பிஜு ஜனதாதளம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது முதல்வர் நவீன் பட்நாயக் அரசில் 2000-2004 வரையில் திரௌபதி முர்மு அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். வர்த்தகம், போக்குவரத்து, மீன், கால்நடைத் துறைகளின் அமைச்சராக அவர் இருந்துள்ளார்.2015, மே 18-இல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக திரௌபதி முர்மு பொறுப்பேற்றார். 2021, ஜூலை 12 வரை ஆளுநர் பதவியை அவர் வகித்தார்.

2017 குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் திரௌபதி முர்முவின் பெயர் பரிசீலனையில் இருந்தது. எனினும், அப்போதைய பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.திரௌபதி முர்முவின் கணவர் ஷியாம் சரண் முர்மு, இரண்டு மகன்கள் உயிரிழந்துவிட்டனர். அவருக்கு மகள் மட்டும் உள்ளார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
PTI06 21 2022 000465B - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories