December 12, 2025, 5:10 PM
28.3 C
Chennai

அ.தி‌.மு.க. பொதுக்குழு கூட்டம் துவக்கம்- மண்டபத்தில் ஓபிஸ் வந்ததும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ஒற்றை தலைமை கோஷத்தை முழங்கியதால் பரபரப்பு ..

ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் ஓபிஸ் வந்ததும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் முழங்கியதால் பரபரப்பு நிலவியது.

FB IMG 1655959064390 1 - 2025
740353 untitled 1 - 2025
FB IMG 1655959064390 - 2025

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிகாலையிலேயே குவிந்ததால் வானகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. ஒற்றை தலைமை விவகாரத்தை வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய எடப்பாடி அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல், வானகரம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. தொண்டர்களின் உணர்வுக்கேற்ப பொதுக்குழு நடைபெறுகிறது. தொண்டர்களின் உணர்வு, குரலை யாராலும் தடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.


அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள மண்டபத்தில் இன்று நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்களில் மூலம் வானகரத்தில் குவிந்து வருகின்றனர். மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் முயற்சியில் போக்குவரத்து போலீசால் ஈடுபட்டு வருகின்றனர்.

FB IMG 1655959056008 - 2025
FB IMG 1655959038734 - 2025
FB IMG 1655959081405 - 2025

வானகரம் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாற்று பாதையில் பயணம் மேற்கொண்டனர். இதனால் பொதுக்குழு கூட்டம் சற்று தாமதமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க வந்த உறுப்பினர்கள் கையெழுத்திடும் நடைமுறையை பின்பற்றவில்லை என தகவல். கையெழுத்திடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும் உறுப்பினர்கள் பின்பற்றவில்லை.

மொத்தம் உள்ள 2,625 பொதுக்குழு உறுப்பினர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு 2505 பேரும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு 120 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகியவண்ணம் உள்ளது. மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. எம்.எல்.ஏ.க்களில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கத்தை தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் மற்ற அணிகளின் தலைவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். 2,500 போலீசார் குவிப்பு தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காத வண்ணம் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு வரலாறு காணாத வகையில் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட இருக்கிறது. சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். அடையாள அட்டைகளுடன் வரும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டும் கூட்டத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.இந்த நிலையில் பொதுக்குழுவில் பங்கேற்க மண்டபத்தில் ஏபிஎஸ் நுழைந்ததும் ஒற்றை தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் கோஷமிட்டனர்.பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற மேல்முறையீடு மனுவை விசாரித்த தனி நீதிபதிகள் தடை விதித்துள்ளதால் குரல் வாக்கெடுப்பு நடத்தியும் அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி யைதேர்வு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எடப்பாடி அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

1717200 admk - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

Topics

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

தென்காசி டூ காசி… அகத்திய முனிவரின் 9 நாள் வாகனப் பயணம்!

அகத்திய முனிவரின் வாகனப் பயணம் 9 நாள் யாத்திரையை வெற்றிகரமாக முடித்து காசியை அடைந்தது.

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Entertainment News

Popular Categories