மத வன்முறையை என் அரசு ஒருபோதும் அனுமதிக்காது: பிரதமர் மோடி

Narendra_Modi புதுதில்லி, எந்த ஒரு மதத்துக்கு எதிராகவும் வன்முறைகள் நடத்தப் படுவதை என் அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்று கூறினார் பிரதமர் மோடி. தில்லியில் அண்மைக் காலமாக கிறிஸ்தவ வழிபாட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தில்லியில் 5 கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும் கிறிஸ்தவ பள்ளியின் மீதும் தாக்குதல் நடந்த விவகாரத்தில் இதுவரை அமைதிகாத்தார் பிரதமர் மோடி. அவரை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த மோடி, எல்லா மதத்தினருக்கும் சமமான மரியாதையை எனது அரசு கொடுக்கும் என்று உறுதி அளித்தார். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “முழு சுதந்திரம் உள்ளது என்ற நம்பிக்கையை எனது அரசு உறுதி செய்யும், எல்லோரும் தங்களது சொந்த மதத்திற்கு திரும்பவோ அல்லது புதிய மதத்தை ஏற்றுக் கொள்ளவோ அல்லது கட்டாயம் இல்லாமல் மதத்தை தேர்வு செய்யவோ மறுக்கப்படாத உரிமை உள்ளது என்பதையும் எனது அரசு உறுதி செய்யும். மைனாரிட்டி அல்லது மெஜாரிட்டி பிரிவைச் சேர்ந்த மத குழுக்கள், வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ, மற்றவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுவதை எனது அரசு அனுமதிக்காது. அனைத்து மதத்திற்கும் அரசு சமமான மரியாதையை வழங்கும். எந்த ஒரு மதத்திற்கு எதிரான வன்முறையையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இதுபோன்ற வன்முறைகளுக்கு பெரிதும் கண்டனம் தெரிவிக்கிறேன். இதுபோன்ற வன்முறைகளுக்கு எதிராக எனது அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Topics

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories