பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த 3 நாட்களில் 100 பேர் பலி; தமிழகத்தில் அமைச்சர் தலைமையில் உயர்நிலைக் கூட்டம்

symptoms_of_swine_flu நாட்டில் பன்றிக் காய்ச்சல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை இந்த வருடத்தில் மட்டும் 585 ஆக உயர்ந்துள்ளது. பிப்ரவரி 12ம் தேதிக்கு பின்னர் கடந்த 3 நாட்களில் மட்டும் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தில்லி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி வரையில் நாட்டில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 485 ஆக இருந்தது. கடந்த மூன்று நாட்களில் பாதிப்பு மிகவும் அதிகரித்து 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 585 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,423 ஆக உள்ளது. ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் முறையே 165, 144, 76, 58 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 15ம் தேதி ராஜஸ்தானில் 12 பேர் பலியாகியுள்ளனர். தில்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மற்றும் சுகாதாரத் துறை செயல்பாடு காரணமாக பாதிப்பு குறைவாக உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பெருகி வரும் பன்றி காய்ச்சல், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல்களால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருவது உயர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று துவங்கிய நிலையில், சட்டமன்றத்திலும் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. நிலையைத் தடுக்க தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை அரசுக்கு உள்ளதால், இன்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்று மாலை 3.30 மணி அளவில் சென்னை பல்நோக்கு மருத்துவமனையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுகாதார அதிகாரிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பங்கேற்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories