பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த 3 நாட்களில் 100 பேர் பலி; தமிழகத்தில் அமைச்சர் தலைமையில் உயர்நிலைக் கூட்டம்

symptoms_of_swine_flu நாட்டில் பன்றிக் காய்ச்சல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை இந்த வருடத்தில் மட்டும் 585 ஆக உயர்ந்துள்ளது. பிப்ரவரி 12ம் தேதிக்கு பின்னர் கடந்த 3 நாட்களில் மட்டும் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தில்லி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி வரையில் நாட்டில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 485 ஆக இருந்தது. கடந்த மூன்று நாட்களில் பாதிப்பு மிகவும் அதிகரித்து 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 585 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,423 ஆக உள்ளது. ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் முறையே 165, 144, 76, 58 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 15ம் தேதி ராஜஸ்தானில் 12 பேர் பலியாகியுள்ளனர். தில்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மற்றும் சுகாதாரத் துறை செயல்பாடு காரணமாக பாதிப்பு குறைவாக உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பெருகி வரும் பன்றி காய்ச்சல், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல்களால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருவது உயர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று துவங்கிய நிலையில், சட்டமன்றத்திலும் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. நிலையைத் தடுக்க தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை அரசுக்கு உள்ளதால், இன்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்று மாலை 3.30 மணி அளவில் சென்னை பல்நோக்கு மருத்துவமனையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுகாதார அதிகாரிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பங்கேற்றன.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Topics

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories