அ.தி.மு.க.தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில் 144 தடை உத்தரவு..

Published:

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுக பொருளாளருக்கான அதிகாரரங்கள் அனைத்தையும் பொதுச்செயலாளருக்கு வழங்கி சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.அ.தி.மு.க., அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

500x300 766702 eaaa - 2026

ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சமாளிக்கும் நோக்கத்துடன் அதிமுக சட்ட விதிகளில் ஏராளமான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு பொதுச்செயலாளர் சேர்தலுக்கான வீதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

500x300 1727215 admk2 - 2026

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேறியது. கூட்டத்தில் பேசிய ஆர்.பி உதயகுமார்; அதிமுகவில் தொண்டர்கள் புரட்சி நடைபெற்றுள்ளது. தன்னம்பிக்கையால் உயர்ந்தவர் உழைப்பால் தொண்டர்களின் மனங்களை வென்றவர் இபிஎஸ். ராமனுக்கு மகுடம் சூட்டுகிறபோது லட்சுமணன் தியாகத்தினால் வரலாற்றில் இடம் பெற்றார். ஒன்றரை கோடி தொண்டர்கள் லட்சுமணன் போல இபிஎஸ் உடன் நிற்கிறோம். இவ்வாறு கூறினார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!
Tamil News large 3074035 - 2026

அ.தி.மு.க., அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தை பன்னீர்செல்வம் கைப்பற்றிய நிலையில், அங்கு பழனிசாமி ஆதரவாளர்கள் வந்தால் மோதல் ஏற்படும் சூழல் என்பதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img