செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லுார் அரசு பள்ளியில் ரோட்டரி கிளப் சார்பில் 78வது சுதந்திர தினவிழா.

Published:

DSC 0377 - 2026
செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லுார் அரசு பள்ளியில் ரோட்டரி கிளப் சார்பில் 78வது சுதந்திர தினவிழா.
 செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து செங்கோட்டை ரோட்டரி கிளப் சார்பில் 78வது சுதந்திர தினவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமைஆசிரியா் திவான்பக்கீர் தலைமைதாங்கினார். உதவி தலைமைஆசிரியா் கோமதிவிநாயகம்  அனைவரையும் வரவேற்று பேசினார். ரோட்டரி கிளப் ஆப் செங்கோட்டை மண்டல துணை ஆளுநர் பால்ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினா். அதனைதொடா்ந்து பள்ளி மாணவ, மாணவியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி மாணவ, மாணவியா்களுக்கு பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ரோட்டரி கிளப் தலைவா் அபுஅண்ணாவி, செயலாளா் தேன்ராஜ, பொருளாளா் சீதாராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். பட்டதாரி ஆசிரியா் கிறிஸ்டோபர் தொகுப்புரையாற்றினார். முதுநிலை ஆசிரியா் சண்முகசுந்தரம் நன்றி கூறினார். 
ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img