December 7, 2025, 4:59 AM
24.5 C
Chennai

சென்னையில் குழந்தைகளை குறிவைத்து பரவி வரும் காய்ச்சல்..

images 2022 09 14T142550.176 - 2025

சென்னையில் கடந்த சில நாட்களாக எப்போதும் இல்லாத அளவில் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திடிரென்று பரவி வரும் காய்ச்சலால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். திடீர் சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் தினந்தோறும் குவிந்து வருகிறார்கள். இதனால் பல ஆஸ்பத்திரிகளில் உள்நோயாளிகள் பிரிவு நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் இன்று சளி, இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஏராளமானோர் குவிந்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது பல குழந்தைகளுக்கு காய்ச்சலின் தீவிரம் அதிகம் இருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து இன்று மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து காய்ச்சல், இருமலுக்கு சிகிச்சை பெறுபவர்கள் அதிகரித்து வருவதால் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, “காய்ச்சல் 3 அல்லது 4 நாட்களில் குறைந்தாலும் இருமல் குறைந்தது 2 வாரங்களுக்கு நீடிக்கிறது. வழக்கத்தை விட கூடுதலாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கிறார்கள். குழந்தைகளுக்கு பரவி உள்ள வைரஸ் எந்த வகையானது என்பது குறித்து அறிய பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அவர்களது உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். சமீப காலங்களில் காய்ச்சல், சளி மற்றும் இருமல் வேகமாக பரவுவதற்கு வானிலையில் நிலவும் மாற்றம் ஒரு காரணமாக உள்ளது. இதனால் கடுமையான காய்ச்சல், நடுக்கம், கடும் களைப்பு, தலைவலி, உடல்வலி, தொண்டையில் வறட்சி, வாந்தி, வயிற்று வலி ஆகியவை ஏற்படுகிறது. இதில் இருந்து தப்பிக்க கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories