பெண் போலீஸிடம் தரக்குறைவாகப் பேசிய உதவி ஆணையர் மீது விசாரணை: ஆணையர் ஜார்ஜ்

chennai-commissioner-george
சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ்
சென்னை: பெண் போலீஸிடம் தரக்குறைவாகப் பேசிய போலீஸ் உதவி ஆணையர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ பதிவு நேற்று முழுவதும் பரவியது. அதில், சென்னையில் பணியாற்றும் உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர், பெண் போலீஸ் ஒருவருடன் காதல் ரசம் சொட்டும் வசனங்களைப் பேசுகிறார். என்னை விட உன் கணவர் அழகா இருப்பாரா?, நீ சுடிதாரில் அழகாக இருக்கிறாய், தனியாக வெளியில் சந்திப்போம், என்று செல்போனில் அழைப்பு விடுக்கிறார். செல்போனில் ஒண்ணு (முத்தம்) தரவா என்றும் கேட்கிறார். நேற்று சென்னை போலீஸ் வட்டாரத்தில் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் இந்த செல்போன் பதிவு பரபரப்பாக பேசப்பட்டது. இந்த உரையாடலை நிகழ்த்தியவர், ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். 1987-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக வேலைக்குச் சேர்ந்தவர். மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பல் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார். மகள் என்ஜினீயரிங் மாணவி. தொல்லைக்கு ஆளான பெண் போலீசும் திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாய். இருவருக்கும் 20 வயதுக்கு மேல் வித்தியாசம் இருக்கும். இருப்பினும், அந்த பெண் போலீஸ் இதுவரை புகார் எதுவும் கொடுக்கவில்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். வடசென்னை கூடுதல் ஆணையர் வி.ஏ.ரவிக்குமார், இந்த விசாரணையை நடத்துகிறார். தொடர்புடைய உதவி ஆணையர், பெண் போலீஸ், பெண் போலீசின் தோழிகள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. அவர் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் உதவி போலீஸ் ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. வாட்ஸ்-அப்பில் பரவிய அந்த ஒலிப்பதிவு: 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories