பெண் போலீஸிடம் தரக்குறைவாகப் பேசிய உதவி ஆணையர் மீது விசாரணை: ஆணையர் ஜார்ஜ்

chennai-commissioner-george
சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ்
சென்னை: பெண் போலீஸிடம் தரக்குறைவாகப் பேசிய போலீஸ் உதவி ஆணையர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ பதிவு நேற்று முழுவதும் பரவியது. அதில், சென்னையில் பணியாற்றும் உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர், பெண் போலீஸ் ஒருவருடன் காதல் ரசம் சொட்டும் வசனங்களைப் பேசுகிறார். என்னை விட உன் கணவர் அழகா இருப்பாரா?, நீ சுடிதாரில் அழகாக இருக்கிறாய், தனியாக வெளியில் சந்திப்போம், என்று செல்போனில் அழைப்பு விடுக்கிறார். செல்போனில் ஒண்ணு (முத்தம்) தரவா என்றும் கேட்கிறார். நேற்று சென்னை போலீஸ் வட்டாரத்தில் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் இந்த செல்போன் பதிவு பரபரப்பாக பேசப்பட்டது. இந்த உரையாடலை நிகழ்த்தியவர், ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். 1987-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக வேலைக்குச் சேர்ந்தவர். மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பல் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார். மகள் என்ஜினீயரிங் மாணவி. தொல்லைக்கு ஆளான பெண் போலீசும் திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாய். இருவருக்கும் 20 வயதுக்கு மேல் வித்தியாசம் இருக்கும். இருப்பினும், அந்த பெண் போலீஸ் இதுவரை புகார் எதுவும் கொடுக்கவில்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். வடசென்னை கூடுதல் ஆணையர் வி.ஏ.ரவிக்குமார், இந்த விசாரணையை நடத்துகிறார். தொடர்புடைய உதவி ஆணையர், பெண் போலீஸ், பெண் போலீசின் தோழிகள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. அவர் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் உதவி போலீஸ் ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. வாட்ஸ்-அப்பில் பரவிய அந்த ஒலிப்பதிவு: 
ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories