சத்து மாத்திரையை சாக்லேட் என்று சாப்பிட்ட குழந்தை பலி

Published:

சென்னை: சென்னையில், தாய் எடுத்துக் கொள்வதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த சத்து மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து விழுங்கிய 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏழுகிணறு அப்பாசாமி சந்து பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மனைவி பாளையம். சந்தோஷ் இதே பகுதியில் காய்கறிக் கடை வைத்துள்ளார். இவர்களுக்கு ரித்திகா என்ற 4 வயது பெண் குழந்தையும், சஞ்சய் என்ற 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். சந்தோஷ் மனைவி பாளையத்துக்கு குழந்தை பிறந்ததையொட்டி, அவர் எடுத்துக் கொள்ள சத்து மாத்திரைகளை அரசு மருத்துவமனையில் கொடுத்துள்ளனர். கடந்த 12ம் தேதி வீட்டில் மாத்திரைகளை பாளையம் கீழே வைத்துவிட்டு சமையல் செய்ய உள்ளே சென்றுள்ளார். அப்போது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ரித்திகா அந்த மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து வாயில் போட்டு விழுங்கியிருக்கிறாள். இதனால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தாள். இதைக் கண்டு பாளையம் பதறியடித்து உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ரித்திகாவை எடுத்துச் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ரித்திகா உயிரிழந்தாள். இதுகுறித்து, ஏழுகிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img