செங்கோட்டை அருகே உள்ள கற்குடியில் கிராமசபை கூட்டம் நடந்தது.

Published:

IMG 20240815 WA0150 - 2026
செங்கோட்டை அருகே உள்ள கற்குடியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
 செங்கோட்டை அருகே உள்ள  கற்குடி பஞ்சாயத்து கட்டளைகுடியிருப்பில் வைத்து 78வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கற்குடி பஞ்சாயத்து தலைவர் முத்துப்பாண்டியன் தலைமைதாங்கினார்.  துணைத் தலைவர் பாக்கியலட்சுமி முன்னிலைவகித்தார். கிராம சபை கூட்டத்தில்  செங்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் மற்றும் சுகாதார ஆய்வாளர் கல்யாண சுந்தரம் கலந்துகொண்டு பிறப்பு பதிவில் பெயர் சேர்ப்பதன் அவசியத்தை பற்றியும் தற்பொழுது பெயர் சேர்ப்பதில் 31 12 2024 வரை உள்ள விதிவிலக்குகள் பற்றியும் அதன் பிறகு விதிவிலக்குகள் கிடையாது என்பது பற்றியும் சுத்தமான குடிநீர் பருகுவதன் அவசியத்தை பற்றியும் அயோடின் உப்புகள் பற்றிய விழிப்புணர்வையும் முத்துலட்சுமி ரெட்டி மகளிர் மகப்பேறு உதவி திட்டம் மற்றும் தாய் சேய் நல பரிசு பெட்டகம் மாதவிடாய் கால சுகாதார திட்டம் மக்களை தேடி மருத்துவம் முதலிய தமிழக அரசின் பொது சுகாதார நலத் திட்டங்களை பற்றி விளக்கி கூறப்பட்டது கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் செயலர் இசக்கி நன்றி கூறினார்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img