இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி அ.தி.மு.க. -இபிஎஸ்

தனது சொந்த கட்சி கூட்டம் நடைபெறக்கூடாது என்று சொன்ன ஒரே தலைவர் ஓ.பி.எஸ். தான். அ.தி.மு.க. கம்பெனி இல்லை. எடப்பாடி பழனிசாமி இந்த பதவியில் இல்லை என்றால் ஒரு சின்னச்சாமி இந்த பதவிக்கு வருவார். என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு கூட்டத்தில் பேசினார்.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக இருந்து படிப்படியாக பதவிக்கு வந்தவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் நானும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி அ.தி.மு.க. தான். அ.தி.மு.க.வில் கிளை கழக செயலாளராக பணிபுரிந்த நான் இங்குள்ள மூத்த தலைவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கிறேன்.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வகுத்த பாதையில் அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்க கடுமையாக உழைப்பேன். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய நீங்களும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும். இதன் மூலம் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். அ.தி.மு.க.வில் இருந்து எட்டப்பர்கள் வெளியேறலாம். உண்மை தொண்டர்கள் யாரும் செல்ல மாட்டார்கள். எந்த காலத்திலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. நாம் ஆட்சிக்கு வந்த போது மு.க.ஸ்டாலின் ஒருமாதம் கூட ஆட்சி நீடிக்காது என்றார். ஆனால் 4 ஆண்டுகளுக்கும் மேல் நாம் சிறப்பாக ஆட்சி செய்தோம். எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.

அ.தி.மு.க.வில் பிரச்சினை தொடங்கிய பிறகு மூத்த தலைவர்கள் பலமுறை ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசி இருக்கிறார்கள். நாம் சமாதானமாக இருக்கலாம். யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வரலாம். ஒற்றை தலைமையாக இருக்க வேண்டும். மக்கள், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் எண்ணம் ஒற்றை தலைமை. அதற்கு நீங்கள் இசைந்து கொடுங்கள் என்றனர். அவர் இசைந்து கொடுக்கவே இல்லை. இரட்டை தலைமையால் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்கு தெரியும். நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுக்கு தெரியும். மக்களின் எண்ணத்துக்கு ஏற்றுவாறு செயல்பட்டால் தான் நாம் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். ஒற்றை தலைமை என்று ஒலித்த குரல் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் எதற்கு எடுத்தாலும் விட்டுக் கொடுக்கிறேன் என்பார். நீங்கள் எதை விட்டுக் கொடுத்தீர்கள்? நாங்கள் தான் விட்டுக்கொடுத்தோம். நீங்கள் எப்போதுமே விட்டுக்கொடுக்கவில்லை. அம்மாவுக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்று சொல்கிறார். நீங்கள் எப்போது அம்மாவுக்கு விசுவாசமாக இருந்தீர்கள். அம்மா 1989-ல் தேர்தலை சந்தித்த போது நீங்கள் எதிர் அணியில் போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு மூத்த ஒரு தொண்டனாக இருந்தீர்கள். நீங்கள் எப்படி அம்மாவுக்கு விசுவாசம். அம்மா வெற்றி பெறக்கூடாது என்று எதிர் அணிக்கு மூத்த ஏஜெண்டாக இருந்தீர்கள். நான் 48 ஆண்டுகாலம் அ.தி.மு.க.வில் விசுவாசமாக செயல்பட்டுள்ளேன். நான் முதல்-அமைச்சராக இருந்த போது உங்களில் ஒருவனாகத்தான் நான் இருந்தேன். இப்போதும் உங்களில் ஒருவனாகத்தான் நான் இருக்கிறேன். எப்போதும் உங்களில் ஒருவனாகத்தான் இருந்து செயல்படுவேன். எனக்கு கட்சி தான் உயிர். தனது சொந்த கட்சி கூட்டம் நடைபெறக்கூடாது என்று சொன்ன ஒரே தலைவர் ஓ.பி.எஸ். தான்.

அ.தி.மு.க. கம்பெனி இல்லை. எடப்பாடி பழனிசாமி இந்த பதவியில் இல்லை என்றால் ஒரு சின்னச்சாமி இந்த பதவிக்கு வருவார். ஓ.பி.எஸ்.சுக்கு சுயநலம் உண்டு. தனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதே அவரது குறிக்கோள். இவ்வாறு அவர் பேசினார்.

1727392 eps - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories