கர்நாடகா -லாரி மீது கார் மோதி விபத்து 5 பேர் உயிரிழந்த சம்பவம்..

Published:

கர்நாடகா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியபோது லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த 4 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கொபல் மாவட்டம் கூகனூர் தாலுகா பின்யல் கிராமத்தை சேர்ந்தவர் தேவப்பா கூப்பட் (62). இவர் தனது உறவினரின் பேத்தியின் பிறந்தநாள் விழாவில் அங்கேற்பதற்காக கொபல் நகருக்கு நேற்று இரவு காரில் சென்றுள்ளார். காரில் தேவப்பாவுடன் அவரது உறவினர்கள் 9 பேர் சென்றுள்ளனர். இந்நிலையில், பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை நிறைவு செய்துவிட்டு நேற்று இரவு காரில் 8 பேரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

இரவு 11 மணியளவில் பஹன்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் எதிரே வந்த லாரி மீது கார் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
images 2022 07 24T132338.584 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img