ராஜபாளையத்தில் குமாரசாமி ராஜா திருஉருவ சிலைக்கு அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை…

IMG 20220726 WA0077 - 2026

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த பி.எஸ்‌.குமாரசாமி ராஜா திருஉருவ சிலைக்கு இந்து
மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.அவர் செய்தியாளர் மத்தியில் கூறியபோது தமிழகத்தில் வெகு சீக்கிரத்தில் மாற்றங்கள் வரும் என பேசினார்.

பாரத பிரதமர் இல்லம்தோறும் தேசியக்கொடி உள்ளம் தோறும் தேசபக்தி என அறிவித்துள்ள நிலையில்
திராவிடம் அல்ல ஒன்றியம் அல்ல உள்ளந்தோறும் தேசபக்தி என்று கூறி கட்சியினர் முழக்கம் ஈட்டனர். உடன் விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் தலைவர் சரவண கார்த்திகேயன், மாநில துணை தலைவர் குணசீலன், மாவட்ட தலைவர் லெனின், மாவட்ட அமைப்பாளர் சிவா, அமைப்பு குழு தலைவர் பொன்னுச்சாமி, வடக்கு ஒன்றிய தலைவர் சிவசக்தி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பின் செய்தியாளர் சந்திப்பில்,அவர் கூறுகையில்,

இந்திய சுதந்திர அமுத விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் ஜூலை-15 முதல் ஆகஸ்ட் 15 வரை சுதந்திர போரட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை போற்றும் வகையாக நினைவிடங்களில் மரியாதை செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

குமாரசாமிராஜா பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்தார் .மேலும் பள்ளி கல்லூரி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செயல்படவில்லை, உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக செயல்படுகிறார். ஆசிரியர்களை மிரட்டு நோக்கத்துடன் செயல் படுபவதை கைவிட வேண்டும் என கூறினார்.

இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் சூறையாடப்படுகின்றது. அதை கிறிஸ்தவர்கள் நடந்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் யாரும் கண்டு கொள்வதில்லை. தற்போது அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இதற்க்கு அமைச்சர் பொறுப்பேற்பாரா என கேள்வி எழுப்பினார்.

சபாநாயகர் ஆவுடையப்பன் அனைத்து மதத்தினருக்கும் அனைத்து சமுதாயத்தில் இருக்கும் பொதுவானவர். இவர் கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மற்ற மதத்தினரை படிப்பறிவு இல்லாதவர்கள் என கூறுவது நல்லதல்ல. சபாநாயகர் ஆவுடையப்பன் மதமாறி இருக்கலாம். அதற்காக மற்ற மதத்தினரை தவறாக பேசக்கூடாது. பொதுவானராக இருக்க வேண்டும் நீங்கள் இதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் சபாநாயகர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கருப்புக்கொடி காட்டுவோம் என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். அதேபோல் தமிழக முதல்வரும் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து கூறுவதில்லை. அதனால்தான் இந்த அரசை இந்து விரோத அரசு என நாங்கள் கூறுகிறோம் எனக் கூறினார்.

தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி, இந்து அமைப்புகள் நடத்துகின்ற நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுப்பது தடை விதிப்பது நல்லதல்ல. எங்களுடைய கருத்துரிமை பேச்சுரிமை பறிக்கக் கூடாது .எங்கள் மீது தடைகள் விதிப்பதை ஜனநாயக முறைப்படி எதிர்கொள்வோம். எங்களுடைய தேசியக் கொள்கை எடுத்துச் சொல்வோம்.தமிழகத்தில் வெகு சீக்கிரத்தில் மாற்றங்கள் வரும் என பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories