
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடந்த மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் ராஜபாளையம் வைமா வித்யாலயா பள்ளிக்கு சாம்பியன் ஆஃப் சாம்பியன் பட்டம் கிடைத்தது.
மாநில அளவிலான யோகாசனப் போட்டி சாத்தூர் ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
பல்வேறு பள்ளிகளில் இருந்து 458 பேர் கலந்துகொண்ட இப்போட்டியில் ராஜபாளையம் வைமா வித்யாலயா பள்ளியிலிருந்து 57 மாணவர்கள்
கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.
ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கண்ணன் பிஎஸ்என்எல்.கல்வியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜே. ராஜேஸ்வரி மற்றும் சிவகாசி எஸ்எப்ஆர் கல்லூரியின் சேர்மனும் கிருஷ்ணா ஃபயர் ஒர்க்ஸ்ஸின் உரிமையாளருமான சி. அருண்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு யோகா செய்து காட்டிய மாணவர்களைப் பாராட்டி வைமா வித்யாலயாவிற்கு “சாம்பியன் ஆஃப் சாம்பியன்” பட்டத்தை வழங்கிப் பெருமைப்படுத்தினர்.
பங்குபெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வைமா திருப்பதி செல்வன், மேனேஜிங் டிரஸ்டி அருணாதேவி மற்றும் ஆசிரியர்கள் கேடயமும் பரிசும் பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவித்தனர்.




