குருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 200 ஜோடிகள் திருமணம் செய்ய முன்பதிவு..

1746448 temple 1 - 2026

பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் சுமார் 200 ஜோடிகள் 21-ந் தேதி திருமணம் செய்து கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொள்வது சிறப்பை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தி மற்றும் அதனை தொடர்ந்து வரும் நாட்களில் பலரும் திருமணம் செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி வருகிற 19-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதை அடுத்து வரும் 21-ந் தேதி சுபமுகூர்த்த தினமாகும். அன்று ஞாயிற்று கிழமை என்பதால் பலரும் 21-ந் தேதி திருமணம் செய்ய நாள் குறித்தனர்.

இதற்கான முன்பதிவு கடந்த 8-ந் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே சுமார் 200 ஜோடிகள் 21-ந் தேதி திருமணம் செய்து கொள்ள முன்பதிவு செய்தனர். இதனை அடுத்து கோவில் நிர்வாகம் 2 நாட்களுக்கு முன்பு முன்பதிவை நிறுத்த முடிவு செய்தது. இதையடுத்து அன்றைய தினம் முன்பதிவு செய்ய வந்தவர்களின் பதிவுகளை ஏற்றுக்கொள்ள கோவில் நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதையடுத்து முன்பதிவு மறுக்கப்பட்டவர்களில் சிலர் கேரள ஐகோர்ட்டில் மனு செய்தனர். அதனை விசாரித்த கோர்ட்டு, குருவாயூர் கோவிலில் 21-ந் தேதி திருமணம் செய்ய விரும்புவோரின் மனுக்களை ஏற்க வேண்டும் என அறிவுறுத்தியது.

மேலும் இதற்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியது. அதனை கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து குருவாயூர் கோவில் நிர்வாகம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் ஏற்கனவே உள்ள 3 திருமண மண்டபங்களுடன், கோவில் நடை பந்தலில் கூடுதலாக 2 திருமண மண்டபங்கள் அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் 21-ந் தேதி திருமணம் செய்து கொள்ள விரும்புவோரின் முன்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது, என்றும் அறிக்கையில் கூறியிருந்தது.

இதுபோல குருவாயூர் நகராட்சியும், திருமண பதிவுக்காக விடுமுறை நாட்களிலும், நகராட்சி அலுவலகத்தில் கூடுதல் ஊழியர்களை நியமனம் செய்துள்ளதாக கூறியுள்ளது. அவர்கள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories